புதிதாக கொவிட்-19 கிருமி தொற்றியோர் பற்றிய விவரங்கள்

புதிதாக கொவிட்-19 கிருமி தொற்றியோர் பற்றிய விவரங்கள்

1 mins read
38f557a6-8924-46d3-afb4-a0aecb44c0f1
-

வியாழக்கிழமையன்று 32 புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. இவற்றில் 24 சம்பவங்களுக்குரியவர்கள் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்டகால வருகை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். இவர்களில் 13 பேர் பிரிட்டன் சென்று வந்தவர்கள். கொரோனா கிருமியால் உள்நாட்டிலேயே பாதிக்கப்பட்டோர் எண்மர். ஒருவர் 'போல்டர்+' உடற்பயிற்சிக் கூட கிருமி பரவல் குழுமத்துடன் தொடர்புடையவர். ஒருவர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்புடையவர். எஞ்சிய ஆறு பேருக்கும் மேற்குறிப்பிட்ட எதனுடனும் தொடர்பில்லை என்று கூறப்பட்டது.