வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 39 பேர் உட்பட மேலும் 47 பேரை கொரோனா தொற்றி இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 432ஆக அதிகரித்துள்ளது. உடல்நலம் தேறிய ஒன்பது பேர் நேற்று மருத்துவமனையைவிட்டு வெளியேறினர். அவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 140 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 14 பேர் உட்பட இன்னும் 290 பேருக்குச் சிகிச்சை தொடர்கிறது.
கொரோனா பாதிப்பு 432ஆக உயர்ந்தது
1 mins read
சிங்கப்பூரில் நேற்று மேலும் இரு புதிய கிருமி தொற்றியுள்ளதாகவும் நால்வர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. படம்: எஸ்டி கோப்புப்படம் -

