எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வருகின்றன.
பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியின் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிங்கப்பூர் ஆகாயப் படையின் முன்னாள் ஜெனரல் திருவாட்டி கான் சியாவ் ஹுவாங் நேற்று தொகுதி உலாவில் கலந்துகொண்டார்.
பீஷான் நார்த்தில் கடைத்தொகுதிக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் காணப்பட்டார்.
அவ்வட்டாரத்தில் உள்ள காப்பிக்கடையில் அவர் குடியிருப்பாளர்களிடம் பேசினார்.
பீஷான் நார்த் வட்டாரம் மேரி மவுண்ட் தனித்தொகுதியின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தெம்பனிஸ் குழுத் தொகுதி, செம்பவாங் குழுத் தொகுதி, பைனியர் தனித்தொகுதி, மெக்பர்சன் தனித்தொகுதி ஆகிய இடங்களில் போட்டியிடப் போவதாக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி நேற்று அறிவித்தது.
தெம்பனிஸ் ஸ்திரீட் 81ல் அக்கட்சியினர் நேற்று தொகுதி உலா நடத்தினர்.

