மார்ச் மாதப் பள்ளி விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் நேற்று பள்ளி திரும்பினர்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக மாணவர்களின் நலனை முன்னிட்டு பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விடுமுறையின்போது வெளிநாடுகளுக்குச் சென்ற மாணவர்கள் 14 நாட்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். வகுப்பறையில் தேர்வு நேரத்தில் அமர்வதுபோல கூடுதல் இடைவெளி விட்டு மாணவர்கள் அமர்கின்றனர். அதுமட்டுமல்லாது, பள்ளியில் துப்புரவுப் பணிகள் அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளி உணவகத்திலும் விளையாட்டு மைதானங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

