நாடாளுமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுத அமைச்சர் வோங்

நாடாளுமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுத அமைச்சர் வோங்

2 mins read
8e361c87-aa69-465e-bc5d-cfe0a8a22834
நாடாளுமன்றத்தில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசியபோது அமைச்சர் லாரன்ஸ் வோங் கண்ணீர் விட்டார். படம்: gov.sg -

கொரோனா கிரு­மித்­தொற்­றைச் சமா­ளித்து வரும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­கும் மற்­ற­வர்­க­ளுக்­கும் தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் நன்றி தெரி­விக்­கும்­போது அவர் குரல் தழு­த­ழுத்­தது; அதற்கு மேல் தம் உரை­யைத் தொடர முடி­யா­மல் கண்­ணீர் விட்டு அழு­தார்.

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிருமி பர­வல் தொடர்­பில் அமைக்­கப்­பட்ட அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வுக்­குத் தலைமை தாங்­கும் அமைச்­சர்­க­ளுள் ஒரு­வர் திரு வோங்.

நாட்­டில் ஏற்­பட்டு வரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளைச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களும் மற்­ற­வர்­களும் எதிர்­கொள்ள நாள்­தோ­றும் மேற்­கொள்­ளும் முயற்­சி­க­ளுக்­காக நன்றி தெரி­விக்க முயன்ற திரு வோங் பேச முடி­யா­மல் அழு­தார்.

"வார்த்­தை­கள் இல்லை," என்று கூறி­னார் திரு வோங். மேற்­கொண்டு பேச முடி­யா­மல் உரையை நிறுத்­தி­ய­து­டன் கண்­ணீர் சிந்­தி­னார் அவர்.

"தய­வு­செய்து எனக்கு ஒரு நிமி­டம் தாருங்­கள்," என்று கூறி தன்னை அமை­திப்­ப­டுத்­திக்­கொண்ட பின்­னர் உரை­யைத் தொடர்ந்­தார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் பங்­க­ளிக்­கும் அனை­வ­ருக்­கும் அவர் நன்றி தெரி­வித்­தார்.

"கிரு­மி­யைத் தடுத்து நிறுத்த இத்­தனை சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளால் முடிந்­த­வரை முயற்சி எடுக்­கி­றார்­கள். இதைப் பாராட்ட வார்த்­தை­கள் போதாது.

"தங்­க­ளின் பங்கை ஆற்றி வரும் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் என் மன­மார்ந்த நன்­றி­யைக் கூறிக்­கொள்ள விரும்­பு­கி­றேன்," என்­றார் திரு வோங்.

அவர் பேசி முடித்­த­வு­டன் நாடா­ளு­மன்­றத்­தில் இருந்­தோர் கைதட்­டி­னர்.

கடந்த இரண்டு மாதங்­க­ளுக்­கும் மேலாக கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரா­கப் போராடி வரு­கிறது சிங்­கப்­பூர்.

அதி­லும் அண்­மைய நாட்­களில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து திரும்­பு­வோ­ருக்கு ஏற்­படும் கிரு­மித்­தொற்று கார­ண­மாக பாதிப்பு எண்­ணிக்கை பெரு­ம­ள­வில் அதி­க­ரித்து வரு­கிறது.

நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி, 558 பேர் இங்கு கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், கடந்த சனிக்­கி­ழமை கொரோனா தொற்று கார­ண­மாக இரு­வர் உயி­ரி­ழந்­த­னர்.

கிரு­மித்­தொற்று இன்­னும் பல மாதங்­க­ளுக்­குத் தொட­ரும் என்று எச்­ச­ரித்த திரு வோங், இது குறைந்­தது ஆண்­டி­று­தி­வரை நீடிக்­க­லாம் என்று தெரி­வித்­தார்.

"தூர இடை­வெ­ளியை அதி­க­ரிப்­ப­தற்­காக நாங்­கள் அறி­வித்­துள்ள நட­வ­டிக்­கை­கள், பல­ரின் வாழ்க்­கை­யி­லும் வர்த்­த­கங்­க­ளி­லும் சிர­மத்­தை­யும் இடை­யூ­று­க­ளை­யும் ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன. ஆனால் எங்­க­ளுக்கு வேறு வழி­யில்லை," என்­றார் திரு வோங்.