சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்திலும் நேற்று முதல் முறையாக பாதுகாப்பான இடை வெளி விட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து இருந்தனர்.
அதன் காரணமாக சில உறுப்பினர்கள் பிரதான சபை அரங்கில் அமர முடியவில்லை. மாறாக அவர்கள் வெளிநாட்டு பிரமுகர்கள் இருக்கைகளிலும் இரண்டாம் மாடியில் உள்ள பார்வையாளர் கூடங்களிலும் இடம்விட்டு அமர்ந்திருந்தனர்.
நாடாளுமன்ற அமர்வின் இடைவேளையின்போது அவர்கள் தங்கள் சிற்றுண்டிகளை வெவ்வேறு இடங்களில் உட்கொள்வர், வெவ்வேறு கழிவறைகளைப் பயன்படுத்துவர் என்று நாடாளுமன்ற நாயகர் திரு டான் சுவான் ஜின் நாடாளுமன்றக் கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றியபோது விவரித்தார்.