அமைச்சர் கான் கிம் யோங்: கிருமித்தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கவிடக்கூடாது

அமைச்சர் கான் கிம் யோங்: கிருமித்தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கவிடக்கூடாது

1 mins read
3c061675-a805-4b76-bc07-51910ad19fb9
கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கையில் திடீர் அதி­க­ரிப்­பும் வேண்­டாம்; கிரு­மித்­தொற்று நீடித்த காலத்­திற்­கும் வேண்­டாம் என்­பதே கொவிட்-19 தொடர்பிலான சிங்­கப்­பூ­ரின் இலக்கு என்று சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­னார். படம்: எஸ்டி -

கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கையில் திடீர் அதி­க­ரிப்­பும் வேண்­டாம்; கிரு­மித்­தொற்று நீடித்த காலத்­திற்­கும் வேண்­டாம் என்­பதே கொவிட்-19 தொடர்பிலான சிங்­கப்­பூ­ரின் இலக்கு என்று சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­னார்.

நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய அமைச்­சர், கல்­வி­யா­ளர்­கள் முன்­னு­ரைக்­கும் இரு சூழல்­க­ளைப் பற்றி பேசி­னார்.

முதல் சூழ­லில் அர­சாங்­கம் நட­வ­டிக்கை எது­வும் எடுக்­காது. இத னால் மக்­களில் பெரும்­பா­லா­னோர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வர். ஆனால் அவர்­கள் குண­ம­டைந்து கிரு­மிக்கு எதி­ராக அவர்­க­ளுக்கு எதிர்ப்பு சக்­தி­யும் ஏற்­படும்.

அதி­க­மா­னோ­ருக்கு எதிர்ப்பு சக்தி ஏற்­படும் நிலை வரும் வரை அல்­லது கிரு­மிக்கு எதி­ரான தடுப்­பூசி மற்­றும் மருந்­தைக் கண்­டு­பி­டிக்­கும் வரை தொற்று ஏற்­ப­டு­வ­தும் மெது­வ­டை­யும்.

குறு­கிய காலத்­தில் பல­ருக்­கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால், சுகா தார பரா­ம­ரிப்பு அமைப்­பில் பெரும் பாதிப்பு ஏற்­படும். அந்­தப் பாதிப்பு ஏற்­பட்­டு­விட்­டால் மீண்­டும் பழைய நிலைக்­குத் திரும்ப முடி­யாது என்­றார் அவர்.

அமைச்­சர் முன்­வைத்த இரண்­டா­வது சூழல், தொற்­றின் வேகத்­தைக் குறைக்க பாது­காப்­பான இடை­வெ­ளியை அதி­க­ரித்­தல் போன்ற கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தா­கும். இதன்­படி தொற்று ஏற்­பட்டாலும், தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை குறை­வா­கவே இருக்­கும் என்­பது நம்­பிக்கை என்­றார் அவர்.