ஊழியர்களுக்கும் வேலை இல்லாதோருக்கும் உதவி

3 mins read
40980f74-9c0a-4a16-8a07-2e9f064242bf
உள்­ளூர் மக்­க­ளின் வேலை­க­ளைக் காப்­ப­தற்­கும் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­க­வும் சுய­தொ­ழில் புரி­வோர், குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்கு மேலும் உதவி அதன் மூலம் குடும்­பங்­க­ளைப் பாது­காக்­க­வும் வேலை இல்­லா­த­வர்­க­ளுக்கு உத­வ­வும் வழி­வ­குக்­கும் புதிய நட­வ­டிக்­கை­களை துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்­தார். படம்: எஸ்டி, ஓங் வீ ஜின் -

உள்­ளூர் மக்­க­ளின் வேலை­க­ளைக் காப்­ப­தற்­கும் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­க­வும் சுய­தொ­ழில் புரி­வோர், குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்கு மேலும் உதவி அதன் மூலம் குடும்­பங்­க­ளைப் பாது­காக்­க­வும் வேலை இல்­லா­த­வர்­க­ளுக்கு உத­வ­வும் வழி­வ­குக்­கும் புதிய நட­வ­டிக்­கை­களை துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்­தார்.

நிதி அமைச்­ச­ரு­மான திரு ஹெங், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைச் சமா­ளிக்க உத­வும் வகை­யில் மேலும் $48.4 பில்­லி­யன் துணை வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை மன்­றத்­தில் தாக்­கல் செய்­தார். அதில் முக்­கி­ய­மாக ஐந்து நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்று இருக்­கின்­றன.

சம்­பள மானி­யம் விரிவு, நீட்­டிப்பு

நிதி அமைச்­சர் பிப்­ர­வரி மாதம் 18ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இடம்­பெற்று இருந்த 'வேலை, ஆத­ர­வுத் திட்­டம்' விரி­வு­ப­டுத்­தப்­படும், நீட்­டிக்­கப்­படும்.

இந்­தத் திட்­டத்­தின் மூலம் 1.9 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட ஊழி­யர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக மொத்­தம் $15.1 பில்­லி­யன் ஒதுக்­கப்­ப­டு­கிறது. இத்­திட்­டத்­தில் இப்­போது பலன் பெறு­ப­வர்­க­ளை­விட மேலும் பலர் நன்­மை­ய­டை­யும் வகை­யில் இதற்கு தகுதி பெறு­வ­தற்­கான சம்­பள வரம்பு $3,600லிருந்து $4,600 ஆக உயர்­கிறது.

அதா­வது ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்­தில் முதல் $4,600 தொகைக்கு 25 விழுக்­காடு வரை அர­சாங்­கம் இணை மானி­யம் வழங்­கும். கொரோனா கிருமி கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­க­ளுக்கு ஏற்ப இந்த உதவி கிடைக்­கும். இந்த வேலை உத­வித் திட்­டம் முழு­மை­யாக மேலும் இரண்டு காலாண்­டுக்கு அதா­வது இந்த ஆண்டு முழு­வ­தற்­கும் நீட்­டிக்­கப்­படும். இத­னால் நிறு­வ­னங்­கள் மே, ஜூலை, அக்­டோ­ப­ரில் சம்­பள மானி­யத்­தைப் பெறும்.

சுய­தொ­ழில் புரி­வோ­ருக்­கான மாத ரொக்­கம்

சுய­தொ­ழில் புரி­கின்ற, தகுதி உள்ள சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஒன்­பது மாத காலம், மாதா­மா­தம் $1,000 ரொக்­கம் கிடைக்­கும். புதிய 'சுய­தொ­ழில் புரி­வோ­ருக்­கான வரு­மான நிவா­ர­ணத் திட்­டத்­தின்' கீழ் இந்த உத­வியை அவர்­கள் பெறு­வார்­கள்.

இதன் மூலம் அர­சுக்கு மொத்­தம் $1.2 பில்­லி­யன் செல­வா­கும். மேல் விவ­ரங்­களை மனி­த­வள அமைச்சு விரை­வில் அறி­விக்­கும்.

மேலும் $48 மில்­லி­யன், இந்த ஆண்டு முடிவு வரை சுய­தொ­ழில் புரி­வோ­ருக்­கான பயிற்­சித் திட்­டங்­கள் தொடர்­பில் செல­வி­டப்­படும்.

குறைந்த வரு­வாய் உள்­ள­வர்­க­ளுக்­கான பண உதவி அதி­க­ரிப்பு

பிப்­ர­வ­ரி­யில் தாக்­க­லான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்ட குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்­கான 'வொர்க்­ஃபேர் சிறப்பு பணப் பட்­டு­வாடா திட்­டம்', ரொக்­க­மாக $3,000 வழங்­கும் திட்­ட­மாக மேம்­ப­டுத்­தப்­படும்.

வேலை­களை உரு­வாக்­கு­தல், முதல்­மு­றை­யாக வேலை தேடு­வோ­ருக்­கான பயிற்சி 'SGUnited Jobs' என்ற திட்­டத்­தின்­படி, அடுத்த ஆண்­டில் சுமார் 10,000 புதிய வேலை­கள் உரு­வாக்­கப்­படும்.

பொதுத் துறை­யில் புதி­தாக தலை­யெ­டுக்­கும் துறை­களில் இடம்­பெ­றக்­கூ­டிய வேலை­கள், அத்­தி­யா­வ­சிய சேவை­களில் நீண்­ட­கா­லம் பணி­யாற்­றக்­கூ­டிய வேலை­கள், கொவிட்-19 நெருக்­க­டி­யைக் கையா­ளு­வ­தற்­கான குறு­கியகால வேலை­கள் ஆகி­யவை இவற்­றில் உள்­ள­டங்­கும். தனி­யார் துறை­கள் உரு­வாக்­கும் வேலை­களும் கிடைக்­கும்.

சிங்­கப்­பூர் ஊழி­யர் அணி (Workforce Singapore) இன்று தொடங்­கும் வாழ்க்­கைத் தொழில் சந்­தை­யில் உட­ன­டி­யாக 2,200 வேலை­களை பெறும் வாய்ப்பு கிட்­டும். முதல் முறை­யாக வேலை தேடு­வோர், வேலை அனு­ப­வத்­தைப் பெறும் நோக்­கத்­தில் 'SGUnited பயிற்சி செயல்­திட்­டம்' என்ற ஒரு திட்­டம் இடம்­பெ­றும். இதன்­மூ­லம் 8,000 வேலை வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­படும். மேல் விவ­ரங்­களை விரை­வில் மனி­த­வள அமைச்சு அறி­விக்­கும்.

வேலை இல்­லா­தோ­ருக்கு உத­விக்­க­ரம்

வேலை இல்­லா­த­வர்­க­ளுக்கு சமூ­கச் சேவை அலு­வ­ல­கங்­கள் மற்­றும் சமூக நிலை­யங்­கள் மூல­மாக உத­வு­வ­தற்­காக திரு ஹெங் $145 மில்­லி­யனை ஒதுக்கி இருக்­கி­றார்.

உட­னடி உத­வி தேவைப்­படும் குடும்­பங்­க­ளுக்­காக ஏப்­ர­லில் தற்­கா­லிக நிவா­ரண நிதி ஒன்று ஏற்­ப­டுத்­தப்­படும். 'காம்கேர்' விண்­ணப்­பங்­கள் தொடர்­பில் அதிக நீக்­குப்­போக்கு நடப்­புக்கு வரும்.

இவை எல்­லாம் இத்­திட்­டத்­தில் உள்­ள­டங்­கும். சமூ­கச் சேவை அலு­வ­ல­கங்­கள், மே மாதம் முதல் செப்­டம்­பர் வரை புதிய 'கொவிட்-19 மானி­யம்' என்ற ஒரு திட்­டத்தை நிர்­வ­கித்து நடத்­தும். வேலை இழந்தவர்கள் புதிய வேலையைப் பெற முயலும்போது அல்லது பயிற்சி பெற விரும்பும்போது அவர்களுக்கு மூன்று மாத காலம் மாதம் $800 வழங்க இந்த மானியம் வகைசெய்யும்.