குடும்பங்களுக்குக் கூடுதல் வழங்குதொகை

குடும்பங்களுக்குக் கூடுதல் வழங்குதொகை

3 mins read

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று அறி­வித்த துணை வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில், குடும்­பங்­ களுக்­குக் கூடு­தல் ரொக்க வழங்­கு­தொகை அளிக்­கப்­படும் என்று குறிப்­பிட்­டார்.

கொரோனா கிரு­மி­யால் ஏற்­பட்­டுள்ள நிச்­ச­ய­மற்ற நிலை­யில் தின­சரி ஏற்­படும் செல­வு­க­ளைக் குடும்­பங்­கள் சமா­ளிக்க இந்த வழங்­கு­தொகை கைகொ­டுக்­கும் என்­றார் திரு ஹெங்.

இதன்­படி 2018ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் திரு ஹெங் முதன்­மு­த­லில் அறி­வித்­தி­ருந்த 'பரா­ம­ரிப்பு மற்­றும் ஆத­ர­வுத் தொகுப்­புத்­திட்­டம்' குறிப்­பி­டத்­தக்க அள­வில் மேம்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

மும்­ம­டங்­கா­கும் வழங்­கு­தொகை

அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் ரொக்க வழங்­கு­தொகை மும்­ம­டங்­கா­கும். $300 வழங்­கப்­ப­டு­வ­தற்­குப் பதி­லாக ஒரு­வ­ருக்கு $900 கிடைக்­கும். குறைந்த சம்­பள ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­த­லான வழங்­கு­தொ­கை­கள் அளிக்­கப்­படும்.

சிங்­கப்­பூர் குடி­யு­ரி­மை­யு­டன் 20 அல்­லது அதற்கு கீழ் வய­து­டைய குறைந்­தது ஒரு பிள்ளை இருக்­கும் பெற்­றோ­ருக்கு ஆளுக்கு கூடு­த­லாக $300 ரொக்­க­மாக வழங்­கப்­படும். இதற்கு முன்­னர் $100 என்று கூறப்­பட்­டது.

அத்­து­டன் 50 வயது அல்­லது அதற்கு மேல் வய­து­டைய சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு, அவர்­க­ளின் 'பேஷன்' அட்­டை­யில் $100 நிரப்­பப்­படும் என்று முன்­னரே அறி­விக்­கப்­பட்­டது.

ஆனால் அந்த நிரப்­பு­தல் இப்­போது ரொக்­க­மாக வழங்­கப்­படும் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார். இத­னால் பணம் நிரப்­பும் மையங்­களில் வரி­சை­யில் காத்­தி­ருக்­கத் தேவை­யில்லை.

21 வயது அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­டைய தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு மளி­கைப் பொருட்­களை வாங்­கு­வ­தற்­கான $300 பற்­றுச்­சீட்­டு­களும் வழங்­கப்­படும்.

இந்­தக் கூடு­தல் வழங்­கு­தொ­கை­யால் முன்­னர் $1,800 கிடைக்­க­வி­ருந்த மூன்று தலை­முறை குடும்­பம் ஒன்­றுக்கு இனி $6,700 மதிப்­பி­லான வழங்­கு­தொகை கிடைத்­தி­டும்.

அர­சாங்­கக் கட்­ட­ணங்­கள் நிறுத்திவைப்பு

அர­சாங்­கம் அதன் சேவை­க­ளுக்கு விதிக்­கும் கட்­ட­ணங்­களை ஓராண்­டுக்கு நிறுத்திவைக்­கிறது.

பல்­க­லைக்­க­ழக அல்­லது பல­துறை தொழிற்­கல்­லூரி படிப்­புக்­காக அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து கடன் பெற்­றுக்­கொண்ட பட்­ட­தா­ரி­கள், கட்ட வேண்­டிய கடன் தொகை­யும் அதற்­கான வட்­டி­யும் ஜூன் 1 தொடங்கி அடுத்த ஓராண்­டுக்கு ரத்து செய்­யப்­படும்.

அத்­து­டன் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் அட­மா­னக்­க­டன் நிலு­வை­க­ளைத் தாம­த­மா­கக் கட்­டி­னால் ஏற்­ப­டக்­கூ­டிய கட்­ட­ணங்­கள் மூன்று மாதங்­க­ளுக்கு ரத்து செய்­யப்­படும்.

சுய உத­விக் குழுக்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ரவு

சுய உத­விக் குழுக்­க­ளுக்­குக் கூடு­தல் உதவி வழங்­கப்­ப­டு­கிறது. ஈராண்டு காலத்­தில் $10 மில்­லி­ய­னுக்­குப் பதி­லாக $20 மில்­லி­யன் மதிப்­பி­லான மானி­யங்­கள் வழங்­கப்­படும். $20 மில்­லி­யன் பெற­வேண்­டி­யி­ருந்த சமூக மேம்­பாட்டு மன்­றங்­க­ளுக்கு இனி $75 மில்­லி­யன் கொடுக்­கப்­படும்.

குறைந்த வரு­மான குடும்­பங்­கள், குறைந்த சம்­பள ஊழி­யர்­கள்

குறைந்த சம்­ப­ளம் பெறும் ஊழி­யர்­க­ளுக்­கும் சுய தொழில் செய்­ப­வர்­க­ளுக்­கும் $3,000 கிடைக்­கும். அத்­து­டன் சமூ­கச் சேவை அலு­வ­ல­கங்­கள் மற்­றும் சமூக மன்­றங்­கள் மூலம் வேலை­யில்­லா­தோ­ருக்கு உதவ $145 மில்­லி­யன் ஒதுக்­கி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

"மக்­க­ளின் பாது­காப்பு, நாட்டுப் பொரு­ளி­யல், இதிலிருந்து மீண்டு வரு­வ­தற்­கான நம் தயார்­நிலை ஆகி­ய­வற்­றிக்­குத் தேவைப்­படும் அனைத்து சமூக மற்­றும் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கம் செயல்­ப­டுத்­தும்.

"திடத்­து­டன் இந்­தச் சவால்­களை ஒன்­றாக சமா­ளிக்க சிங்­கப்­பூ­ரர்­கள் இப்­போது தயா­ராக வேண்­டும்," என்று மீட்­சிக்­கான வர­வு­செ­ல­வுத் திட்ட உரை­யின் போது திரு ஹெங் வேண்­டு­கோள் விடுத்­தார்.