சம்பளத்தில் குறைந்தபட்சம் 25% அளவுக்கு மானியம்

சம்பளத்தில் குறைந்தபட்சம் 25% அளவுக்கு மானியம்

2 mins read
944097e5-4b2c-44d9-80db-2250f4ec3e8e
உள்­ளூர் மக்­க­ளின் வேலை­க­ளைக் காக்­க­வும் அவர்­கள் வேலை இழக்­கா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­த­வும் அர­சாங்­கம் எடுக்­கும் துணிச்­சல்­மிக்க, உறு­தி­யான நட­வ­டிக்­கை­கள் மூலம் நிறு­வ­னங்­கள் உள்­ளூர் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்­தில் 25 விழுக்­காடு முதல் 75 விழுக்­காடு வரை மானி­யம் பெறும் என்று நிதி அமைச்­சர் அறி­வித்­தார். படம்: எஸ்டி, சோங் ஜுன் லியாங் -

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான திரு ஹெங் சுவீ கியட், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைச் சமா­ளிக்க உத­வும் வகை­யில் மேலும் $48.4 பில்­லி­யன் ஒதுக்கி துணை வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தாக்­கல் செய்­தார். உள்­ளூர் ஊழி­யர்­க­ளைக் கொண்ட நிறு­வ­னங்­கள் அனைத்­தும் ஊதி­யத்­தில் குறைந்­த­பட்­சம் 25 விழுக்­காடு அள­வுக்கு அர­சாங்­கம் மானி­யம் கிடைக்க அத்­திட்­டம் வகை செய்­கிறது.

உள்­ளூர் மக்­க­ளின் வேலை­க­ளைக் காக்­க­வும் அவர்­கள் வேலை இழக்­கா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­த­வும் அர­சாங்­கம் எடுக்­கும் துணிச்­சல்­மிக்க, உறு­தி­யான நட­வ­டிக்­கை­கள் மூலம் நிறு­வ­னங்­கள் உள்­ளூர் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்­தில் 25 விழுக்­காடு முதல் 75 விழுக்­காடு வரை மானி­யம் பெறும் என்று நிதி அமைச்­சர் அறி­வித்­தார்.

இது கடந்த பிப்­ர­வ­ரி­யில் தாக்­க­லான வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இடம்­பெற்ற 'வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தில்' ஒதுக்­கப்­பட்ட மானி­யத்­தை­விட அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வேலை ஆத­ர­வுத் திட்­டத்தை இன்­னும் மேம்­ப­டுத்­தும் வகை­யில் அந்­தத் திட்­டத்­துக்கு இப்­போது மொத்­தம் $15.1 பில்­லி­யன் ஒதுக்­கப்­ப­டு­கிறது என்று நேற்று நிதி அமைச்­ச­ரு­மான ஹெங் அறி­வித்­தார். ஏற்­கெ­னவே இந்­தத் திட்­டத்­திற்கு $1.3 பில்­லி­யன் அறி­விக்­கப்­பட்டு இருந்­தது.

கடந்த 2009ல் உல­க­ள­வில் நிதி நெருக்­கடி ஏற்­பட்­ட­போது அர­சாங்­கம் அளித்த ஆத­ர­வு­டன் ஒப்­பிட்­டுப் பார்க்­கை­யில் இது இரண்டு மடங்­குக்­கும் அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சாங்­கம் அளிக்­கும் இந்த ஆத­ர­வு­டன் முத­லா­ளி­கள் ஊழி­யர்­களை வேலை­யி­லேயே தொடர்ந்து வைத்­தி­ருந்து உதவ வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொண்­டார்.

நிதி அமைச்­சர் தாக்­கல் செய்த துணை வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் மூன்­றில் ஒரு பகுதி ஊழி­யர்­க­ளின் நல­னுக்­காக ஒதுக்­கப்­ப­டு­கிறது.

வேலை பார்ப்­போ­ரைப் பொறுத்­த­வ­ரை­யில் அவர்­கள் தொடர்ந்து வேலை­யில் நிலைத்­தி­ருக்க முன்­னு­ரிமை அளிக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­க­ளான 1.9 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட எல்லா ஊழி­யர்­க­ளுக்­கும் 25 விழுக்­காடு அடிப்­படை ரொக்க மானி­யம் கிடைக்­கும். அங்­கா­டிக் கடை­கள் உள்­ளிட்ட உணவு, சேவைத் துறை­யில் உள்ள நிறு­வ­னங்­கள் சம்­ப­ளத்­தில் 50 விழுக்­காடு வரை மானி­யம் பெறும். கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக படு­மோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கும் விமா­னப் போக்­கு­வ­ரத்து மற்­றும் சுற்­று­லாத் தொழில்­துறை ஊழி­யர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில், மானி­யத்­தின் அளவு 75 விழுக்­கா­டாக இருக்­கும் என்­றும் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இந்த மானிய ஆத­ரவு, ஓர் உள்­ளூர் ஊழி­ய­ருக்கு முதல் $4,600 மொத்த மாத சம்­ப­ளத்­திற்கு உரி­ய­தாக இருக்­கும். இதுவே சிங்­கப்­பூ­ரின் சரா­சரி சம்­ப­ள­மா­கும்.

மொத்த மாதச் சம்­ப­ளம் என்­பது மத்­திய சேம நிதிக்கு ஊழி­யர்­கள் செலுத்­தும் சந்­தா­வை­யும் உள்­ள­டக்­கி­ய­தா­கும்.

நிறு­வ­னங்­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் பெறும் சம்­ப­ளத்­திற்கு மானி­யங்­கள் கிடைக்­காது. முத­லா­ளி­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள மானி­யத்தை மூன்று தவ­ணை­க­ளாக மே, ஜூலை, அக்­டோ­பர் முடி­வில் பெற­லாம்.