ஆர்ச்சர்ட் ரோட்டில் மக்கள் கூட்டம் குறைந்தது

ஆர்ச்சர்ட் ரோட்டில் மக்கள் கூட்டம் குறைந்தது

2 mins read
61a1efd9-cadb-442b-848c-00ceb45f158d
ஆர்ச்­சர்ட் ரோட்­டில் 1 மீட்­டர் இடை­வெளி விதி கடு­மை­யாக்­கப்­பட்­ட­தற்­குப் பிறகு முதல் நாளான நேற்று அங்கு கூட்­டம் முன்­பை­விட குறை­வா­கக் காணப்­பட்­டது.  படம்: எஸ்டி, திமத்தி டேவிட் -

ஆர்ச்­சர்ட் ரோட்­டில் 1 மீட்­டர் இடை­வெளி விதி கடு­மை­யாக்­கப்­பட்­ட­தற்­குப் பிறகு முதல் நாளான நேற்று அங்கு கூட்­டம் முன்­பை­விட குறை­வா­கக் காணப்­பட்­டது.

அத்­தி­யா­வ­சிய தேவை இருந்­தா­லொ­ழிய கடைத்­தொ­கு­தி­களுக்குச் செல்ல வேண்­டாம் என்­றும் வீட்­டி­லேயே பாது­காப்­பாக இருந்­து­கொள்­ளும்­ப­டி­யும் அர­சாங்­கம் பொது­மக்­க­ளுக்கு நினை­வூட்டி வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் மிக முக்­கிய கடை­த்தொகுதி வட்­டா­ர­மான ஆர்ச்சர்ட் ரோட்­டில் நில­வ­ரம் எப்படி இருக்­கிறது என்­பதை நேரே காண்­ப­தற்­காக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு அந்­தப் பகு­திக்குச் சென்­றது.

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு முன் இருந்­த­தைப் போல பாதி அள­வுக்­குக்­கூட இப்­போது கூட்­டம் இல்லை என்று கடைக்­கா­ரர்­கள் பல­ரும் தெரி­வித்­த­தாக அந்­தச் செய்­தித்­தாள் குறிப்­பிட்­டது.

பல கடைத்­தொ­கு­தி­களும் கூட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களை அமல்­ப­டுத்தி இருக்­கின்­றன. பல நுழை­வா­யில்­களை அடைத்­து­விட்­டன.

எந்­த­வொரு நேரத்­தி­லும் கடை­க­ளுக்­குள் வரும் வாடிக்கை யாளர்­க­ளின் எண்­ணிக்­கையை அவை குறைத்து இருக்­கின்­றன.

ஐயோன் ஆர்ச்­சர்ட் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள கடை­கள் காலி­யா­கவே இருந்­தன. ஒன்று அல்­லது இரண்டு வாடிக்­கை­யா­ளர்­கள் மட்­டும் வந்­தி­ருந்­தார்­கள்.

எத்­தனை பய­னீட்­டா­ளர்­கள் உள்ளே வரு­கி­றார்­கள் என்­ப­தைக் கணக்­கி­டு­வ­தற்­காக கையில் கணக்­கீட்­டுச் சாத­னத்­து­டன் நுழைவு வாயில்­களில் ஊழி­யர்­கள் பணி­யில் இருந்­தார்­கள்.

என்­றா­லும் மூஜி, லுலு­லெ­மன் போன்ற பிர­ப­ல­மான கடை­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் வரி­சைப் பிடித்து நின்­ற­னர். இருந்­தா­லும் 1 மீ. இடை­வெளி நிய­தியை அவர்­கள் கடைப்­பி­டித்­தார்­கள்.

டேங்ஸ் கடைத்­தொ­கு­தி­யில் பல பகு­தி­க­ளி­லும் 1 மீ. இடை வெளியை நினை­வூட்­டும் அடை­யா­ளங்­கள் காணப்­பட்­டன.

கடைத்­தொ­கு­தி­களும் கவர்ச்சி இடங்­களும் இதர பொது இடங்­களும் 10 பேருக்கு மேல் கூட அனு­ம­திக்­கக்கூடாது. அதி­கம் பேர் கூடு­வதை அனு­ம­தித்து கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு வழி­வ­குத்­து­விட்­டால் கடு­மை­யான தண்­டனை விதிக்­கப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இத­னி­டையே, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளைத் தாங்­கள் தவ­றா­மல் எடுத்து வரு­வ­தா­க­வும் வீட்­டிற்கு வெளியே செல­வி­டும் நேரத்தை குறைத்­துக் கொள்­வ­தா­க­வும் வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ரும் தெரி­வித்­த­னர்.

1 மீ. இடை­வெளி உள்­ளிட்ட பல பாது­காப்பு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எல்­லாம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு உத­வி­யாக அர­சாங்க அமைப்­பு­கள் முயற்­சி­களை முடுக்­கி­விட்டு உள்­ளன.