காபந்து அரசு யோசனையைத் தற்காத்து பேசிய டான் செங் போக்

காபந்து அரசு யோசனையைத் தற்காத்து பேசிய டான் செங் போக்

2 mins read
475b7eaf-2850-4a66-a93e-5ce784b11b54
சுகா­தா­ரப் பிரச்­சி­னை­யை­விட அடுத்த பொதுத் தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய அர­ச­மைப்­புச் சட்­டப் பிரச்­சினை பர­வா­யில்லை என்று சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி தலை­மைச் செய­லா­ளர் டான் செங் போக் (படம்) நேற்று தெரி­வித்­தார். படம்: சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சியின் ஃபேஸ்புக் தளம் -

சுகா­தா­ரப் பிரச்­சி­னை­யை­விட அடுத்த பொதுத் தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய அர­ச­மைப்­புச் சட்­டப் பிரச்­சினை பர­வா­யில்லை என்று சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி தலை­மைச் செய­லா­ளர் டான் செங் போக் (படம்) நேற்று தெரி­வித்­தார்.

பொதுத் தேர்­தலை 2021 ஏப்­ரல் மாதத்­திற்­குள் நடத்த முடி­ய­வில்லை என்­றால் அதி­பர் காபந்து அரசை அமைக்க வேண்­டும் என்று டாக்­டர் டான் ஏற்­கெ­னவே யோசனை தெரி­வித்து இருக்­கி­றார். அந்த யோச­னையை நேற்று அவர் தற்­காத்­துப் பேசி­னார்.

சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் இடம்­பெற்ற ஒரு காணொ­ளித் தக­வல் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

டாக்­டர் டான், முன்பு மக்­கள் செயல் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கச் சேவை­யாற்றி இருக்­கி­றார். அதி­பர் தேர்­த­லி­லும் அவர் போட்­டி­யிட்டு இருக்­கி­றார்.

தேர்­தலை முன்­கூட்­டியே நடத்­தி­னால் 2.6 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி அத­னால் சுகா­தார நெருக்­கடி ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்து தலை­தூக்­கும் என்­பதே தான் முன்­வைத்து உள்ள யோச­னை­யின் முக்­கிய அம்­சம் என்று அந்­தக் காணொ­ளிச் செய்தி குறிப்­பிட்­டது.

"அடுத்த 12 மாதங்­களில் உங்­க­ளு­டைய பணி­யைத் திறம்­பட ஆற்றி ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் பாது­காத்து வாருங்­கள். இதுவே அர­சாங்­கத்­துக்கு தெள்­ளத்­தெ­ளி­வாக நான் விடுக்­கும் செய்தி," என்று டாக்­டர் டான் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

தேர்­தலை நடத்த வேண்­டிய கால­கட்­டத்­திற்­குள் கொரோனா கிருமி ஒடுங்­கி­வி­ட­வில்லை என்­றால் அதி­பர் காபந்து அரசு ஏற்­பட வழி­வ­குக்க வேண்­டும் என்று டாக்­டர் டான் விடுத்­தி­ருக்­கும் யோசனை தொடர்­பில் அர­சாங்­கத்­தின் கருத்து என்ன என்­பது பற்றி சில நாட்­க­ளுக்கு முன் நாடா­ளு­மன்­றத்­தில் மூத்த அமைச்­சர் டியோ சீ ஹிய­னி­டம் கேட்­கப்­பட்­டது.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு டியோ, இதன் தொடர்­பில் தான் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­து­டன் ஆலோ­சித்­த­தா­க­வும் தேர்­தலை உரிய காலத்­திற்­குள் நடத்­தா­மல் தாம­தப்­ப­டுத்­து­வது அர­ச­மைப்­புச் சட்­டத்­திற்கு முர­ணா­னது என்று தம்­மி­டம் தெரி­விக்­கப்­பட்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

இதற்­குப் பதி­ல­ளித்த டாக்­டர் டான், பொதுத் தேர்­த­லைத் தாம­தப்­ப­டுத்­து­வது அர­ச­மைப்­புச் சட்­டப் பிரச்­சி­னையை உரு­வாக்­கும் என்­றா­லும் அந்­தப் பிரச்­சினை கொரோனா தொற்­று­நோய் கால­கட்­டத்­தின்­போது தேர்­தலை நடத்­து­வதைவிட சிறந்­த­தா­கவே இருக்­கும் என்று குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று ஒரு பேட்­டி­யில் தேர்­த­லைப் பற்றி கருத்து கூறிய பிர­த­மர் லீ சியன் லூங், எப்­போது பொதுத் தேர்­தலை நடத்­து­வது என்­ப­தன் தொடர்­பில் இது­வரை தான் எந்த முடி­வை­யும் எடுக்­க­வில்லை என்று கூறி­னார்.