கொரோனா கிருமி பரவலால் பாதிக்கப்பட்ட சுய தொழில் செய்பவர்களுக்கு உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு தகுதி பெறாதவர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களின் கோரிக்கைகள் நீக்குப் போக்குடன் பரிசீலிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
மூன்று விதமான கோரிக்கைகளை அமைச்சு பரிசீலித்து வருவதாக நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் ெவளியிட்ட பதிவில் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
தனியார் வீட்டில் வசிப்போர், குடும்ப வருமானம், சுயதொழிலுடன் பகுதி நேரம் வேலை செய்பவர்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் அடிப்படையில் கோரிக்கைகள் பரிசீலிக்கப் பட்டு வருவதாக அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

