மேலும் 42 பேர் பாதிப்பு

மேலும் 42 பேர் பாதிப்பு

1 mins read
c9a77a04-4d62-4453-86d7-a90c135ae516
சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இரு­வர் நேற்­றுக் காலை மர­ண­ம் அடைந்­த­னர். கொரோனா தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் முதன்முதலில் பதி­வான மர­ணங்­கள் இவை­தான். படம்: எஸ், டெஸ்மண்ட் ஃபூ -

சிங்­கப்­பூ­ரில் மேலும் 42 பேருக்கு கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது நேற்று உறுதி செய்­யப்­பட்­டது. இவர்­களில் 24 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். மற்­றவை உள்­ளூர் சம்­ப­வங்­கள் என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. எட்டு சம்­ப­வங்­கள் முந்­தைய கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­புள்­ளவை.

இதற்­கி­டையே கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­ற­வர்­களில் மேலும் 14 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர் என்று அமைச்சு கூறி­யது.