கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று புதிய முயற்சி தொடங்கப்பட்டது.
'எஸ்ஜி கிளீன்' தூதர்கள் எனும் அந்த கட்டமைப்பு பொதுமக்களிடம் சமூகப் பொறுப்புணர்வையும் தூய்மையாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும்.
சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று அந்த புதிய கட்டமைப்பை தொடங்கிவைத்தார்.
எஸ்ஜி கிளீன் தூதர்கள் தங்களுடைய நண்பர்களிடமும் குடும்ப உறுப்பினர்களிடமும் சந்திப்பவர்களிடமும் இரு முக்கிய செய்திகளையும் பரப்புவார்கள் என்று அமைச்சர் சொன்னார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சமூகப் பொறுப்புணர்வு, தங்களை தூய்மையாக வைத்திருப்பது ஆகிய செய்திகளை பரப்புவது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரை பல்வேறு வகையில் தூய்மையாக வைத்திருப்பதை வலியுறுத்தும் தேசிய இயக்கமான 'எஸ்ஜி கிளின்' பற்றிய விழிப்புணர்வில் கடப்பாடு கொண்ட தொண்டூழியர்கள் புதிய கட்டமைப்பில் அங்கம் வகிப்பார்கள்.
இதில் விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய பெயரை தேசிய சுற்றுப்புற வாரியத்திடம் தொண்டூழியராக பதிந்துகொள்ளலாம்.
'எஸ்ஜி கிளீன்' தூதர்களாக செயல்பட வாரியத்திடமிருந்து பயிற்சிப் பொருட்களையும் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.சுமார் 2,000 பேருக்கு பயிற்சி அளிக்க தேசிய சுற்றுப்பற வாரியம் திட்டமிட்டுள்ளது.
உதாரணமாக, பொதுமக்கள் தங்களுடைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க ஊக்குவிக்கப்படும். உணவு நிலையங்கள், காப்பிக் கடைகள் போன்ற இடங்களில் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விதிமுறையை பின்பற்ற வலியுறுத்தப்படும்.

