கொரோனா கிருமித்தொற்று: துணிவு நிதிக்கு பெருகிவரும் நன்­கொடை

கொரோனா கிருமித்தொற்று: துணிவு நிதிக்கு பெருகிவரும் நன்­கொடை

2 mins read
db10bd0d-961e-463e-82b3-4784163d753f
கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கும் சமூக முயற்­சி­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வருகின்­றன.  துணிவு நிதிக்கு $5.9 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான நன்­கொடை சேர்ந்­துள்­ளது. படம்: எஸ்டி, கெல்வின் சிங் -

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கும் சமூக முயற்­சி­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வருகின்­றன. துணிவு நிதிக்கு $5.9 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான நன்­கொடை சேர்ந்­துள்­ளது.

இந்­தத் தொகையை தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அறி­வித்த சமு­தாய குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, நோயா­ளி­கள், சுகா­தா­ரப் பராம ரிப்­புத்துறை மற்­றும் முன்­னிலை ஊழி­யர்­கள், பாதிப்­புக்கு உள்­ளா­கக்­கூ­டிய சிங்­கப்­பூ­ரர்­கள், 'கொவிட் கிருமி தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங் களுக்கு உதவ இந்த நிதி பயன் படுத்­தப்­படும் என்று தெரி­வித்­தார்.

கிருமி பாதிப்­பி­னால் பாதிக்­கப் பட்ட 'செர்­டிஸ்' அதி­காரி ஒரு­வர் இந்த நிதி மூலம் உதவி பெற்று உள்­ளார்," என்­றார் திரு லீ.

கடந்த 2003ஆம் ஆண்­டில் சார்ஸ் நோய் பர­வ­லின்­போது அமைக்­கப்­பட்ட சமூக உண்­டியலால் இந்த நிதி நிர்­வ­கிக்­கப்­படுகிறது.

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்ட முதல் மர­ண­மாக மார்ச் 21ஆம் தேதி அன்று மர­ண­ம­டைந்த 75 வயது பெண் குடும்­பத்­திற்­கும் இந்­நிதி உத­வி­யுள்­ளது.

"இது எந்த வகை­யி­லும் குடும் பத்­தின் வருத்­தத்­தைத் தணிக்­காது என்­றா­லும், இந்த சிர­ம­மான கால­கட்­டத்­தில் ஒரு சிறு நிதி உத­வியை வழங்க முடி­யும் என்று நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்று அமைச்­சர் கூறி­னார்.

துணிவு நிதி­யின் கோவிட் -19 நிவா­ர­ணத் திட்­டங்­கள், அதற்கு எவ்­வாறு விண்­ணப்­பிக்­க­லாம் போன்ற விவ­ரங்­கள் www.ncss.gov.sg/thecouragefund என்ற இணை­யப் பக்­கத்­தில் இடம் பெற்­றுள்­ளன. இதற்­கி­டை­யில், முன்­னிலை ஊழி­யர்­க­ளின் பணிக்கு பாராட்­டுத் தெரி­விக்­கும் வகை­யில் மக்­கள் அனை­வ­ரும் ஒன்­று­சேர்ந்து கைதட்­டும் நிகழ்வு இன்று இரவு 8 மணிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பொது­மக்­க­ளுக்கு இதற்­கான அழைப்பு பேஸ்­புக் மூலம் விடுக்­கப்­பட்டு வரு­கிறது. 'Clap For #SGUnited' என்ற இந்த அழைப்பு, இன்­றி­ரவு சரி­யாக 8 மணிக்கு சன்­னல்­கள், வீட்டு வாசல், வெளி­வா­சல்­களில் மக்­கள் நின்­ற­படி ஒன்று சேர்ந்து கைதட்டி பாராட்­டு­மாறு அழைக்­கிறது.