முதியவரின் கண்ணில் குத்தியவருக்கு ஓராண்டு சிறை

சுவா சூ காங் அவென்யூ 3 வழியாக தாம் நடந்து சென்றுகொண்டிருந்தபோது எதிர்த்திசையிலிருந்து வந்த மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் தம்மை மோதப் பார்த்ததைத் தொடர்ந்து, லிம் வீ மிங் என்பவருக்கும் மின்ஸ்கூட்டர் ஓட்டுநரான திரு கோ சுங் பெங் என்பவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் இருவருக்கும் இடையே வாக்குவதாம் முற்ற, திரு கோவின் இடது கண்ணில் லிம் குத்தினார். கண்ணிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியதைத் தொடர்ந்து, திரு கோ ஆம்புலன்சில் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இடது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டதன் காரணமாக, 68 வயது திரு கோ அந்த கண்ணில் பார்வையை இழந்தார்.

குற்றம் புரிந்த 46 வயது லிம்முக்கு இன்று (மார்ச் 30) ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, நஷ்ட ஈடாக திரு கோவுக்கு $5,258.46 வழங்க லிம்முக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

$10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள லிம், சிறைத் தண்டனையை ஆற்ற ஏப்ரல் 6ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் சரணடைவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!