பிரதமர் லீ: கிருமித்தொற்று எண்ணிக்கை கவலைக்குரியது

உள்ளூரில் தொடர்ந்து பரவும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலையளிக்கும் செய்தி என்றாலும் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றும் அதனால்தான் நாளை மறுநாள் முதல் நடமாட்டக் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுகிறது என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

வேலையிடங்களுக்குச் செல்லாமலும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றும் அனைவரும் பாதுகாப்பு இடைவெளி சட்டங்களைப் பின்பற்றி நடந்தால் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய சாத்தியம் உண்டு என்று அவர் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டை அனைவரும் பின்பற்றினால்தான் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் பலன் அளிக்கும் என்றார் அவர்.

“வீட்டிலேயே இருங்கள். வெளியே செல்லவேண்டும் என்றால் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அனைவரின் சுகாதாரமும் ஒவ்வொருவரின் செயலைச் சார்ந்து உள்ளது என்று கூறிய பிரதமர் லீ, அனைவரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!