அதிகமான இலவச ஒளிவழிகள், காலை 9 மணி முதல் வசந்தம்

2 mins read
cbfcfb83-19d2-404a-9343-e4e0571feb55
தனி­ந­பர்­கள், வீடு­கள், வணி­கங்­கள் வீட்­டி­லி­ருந்­த­படி அத்­தி­யா­வ­சிய சேவை­கள், இணைய நட­வ­டிக்­கை­க­ளின் சீரான செயல்­பாட்டை தொடர்ந்து அனு­ப­விப்­பதை உறுதி செய்­யும் வகை­யில் நாடு தழு­விய இணைய திறனை அதி­க­ரிக்க உள்ளூர் தொலைத்­தொடர்பு நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கப்படும் என்று ஆணையம் கூறியது. படம்: எஸ்டி -

குடி­யி­ருப்புப் பகு­தி­களில் இணைய சேவை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக தொலைத்­தொ­டர்பு உள்­கட்­ட­மைப்பு மேம்­ப­டுத்­தப்­பட உள்­ளது.

மேலும், இந்த கட்­டுப்­பாட்­டுக் காலத்­தில் அதி­க­மான ஒளி­வ­ழி­களை மக்­கள் இல­வ­ச­மாக பார்க்க வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்­கள் தொகை­யில் பெரும்­பகு­தி­யி­னர் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­ ய­வும் படிக்­க­வும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ள கொரோனா பர­வலை முறி­ய­டிக்­கும் புதிய கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து இது இடம்­பெ­று­வ­தாக தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் (ஐஎம்­டிஏ) தெரி­வித்­துள்­ளது.

தனி­ந­பர்­கள், வீடு­கள், வணி­கங்­கள் வீட்­டி­லி­ருந்­த­படி அத்­தி­யா­வ­சிய சேவை­கள், இணைய நட­வ­டிக்­கை­க­ளின் சீரான செயல்­பாட்டை தொடர்ந்து அனு­ப­விப்­பதை உறுதி செய்­யும் வகை­யில் நாடு தழு­விய இணைய திறனை அதி­க­ரிக்க உள்ளூர் தொலைத்­தொடர்பு நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கப்படும் என்று ஆணையம் கூறியது.

தற்­போது வீடு­களில் இணை­யப் பயன்­பாடு அதி­க­ரித்து இருப்­ப­தால், இணைய கட்டமைப்பு மேம்­பா­டு­கள் குடி­யி­ருப்பு பகு­தி­களில் தடையற்ற இணைய சேவை வழங்­கலை உறுதி செய்­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதி­க­மான ஒளிவழிகள் பொது­மக்­க­ளுக்கு இல­வ­ச­மா­கக் கிடைக்கச் செய்­வ­தற்­காக, அவர்கள் தற்­போ­துள்ள சேவை­க­ளுக்கு சந்தா­தா­ரர்­க­ளாக இல்­லா­விட்­டா­லும்கூட, மீடி­யாக்­கார்ப் மற்­றும் கட்­ட­ணத் தொலைக்­காட்சி நடத்­து­நர்­க­ளான சிங்­டெல், ஸ்டார்­ஹப் ஆகி­யோ­ரு­டன் இணைந்து ஆணை­யம் பணி­யாற்­றி­யுள்­ளது.

எடுத்­துக்­காட்­டாக, மீடியா கார்ப் அதன் இல­வச வசந்­தம், சூர்யா ஒளிபரப்பு நேரத்தை உட­ன­டி­யாக நீட்­டிக்­கும். வழக்­க­மாக மாலை 3 மணிக்கு ஒளி­ப­ரப்­பைத் தொடங்­கும் இவை இரண்டும் இந்த கட்டுப்­பாடு காலத்­தில் காலை 9 மணிக்கு ஒளி­ப­ரப்­பைத் தொடங்­கும்.

சிங்­டெல் இன்று முதல் இல­வச முன்­னோட்ட ஒளி­வ­ழி­க­ளின் எண்­ணிக்­கையை 30 ஆக உயர்த்­தும். சந்­தா­தா­ரர்­கள் அல்­லா­த­வர்­கள் இந்த ஒளி­வ­ழி­களை நிறு­வ­னத்­தின் 'காஸ்ட் ஸ்ட்­ரீ­மிங்' சேவை வழி­யாக அணு­க­லாம்.

ஸ்டார்­ஹப் சந்­தா­தா­ரர்­க­ள் 32 இல­வச ஒளி­வ­ழி­க­ளைக் காண­லாம்.

மானிய விலை­யில் கணினி, கண்­ணா­டி­யிழை அகன்ற அலை­வ­ரிசை (ஃபைபர் பிராட்­பேண்ட்) சேவை தேவைப்­படும் குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில் 'NEU பிசி பிளஸ்' திட்­டத்­தி­லும் மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

மூன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட பள்­ளிக்­குச் செல்­லும் குழந்­தை­க­ளைக் கொண்ட குடும்­பங்­கள், எடுத்­துக்­காட்­டாக, மானி­யத்­து­டன் கூடிய இரண்­டா­வது கணி­னி­யைத் தேர்­வு­செய்­ய­லாம்.

அனைத்து சிங்­கப்­பூ­ரர்­களும் சிங்­கப்­பூர்­வா­சி­களும் தொடர்­பு­ட­னும், உற்­பத்­தித்­தி­ற­னு­டன் பொழுது­போக்கு வச­தி­யு­டன் இருக்க அர­சாங்­கம் உத­வு­கிறது என்று தக­வல் தொடர்பு அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

மின்­னி­லக்க இணைப்பு, உள்­ள­டக்­கம், சேவை­யைப் பெறு­தல் ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான இந்த முயற்­சி­கள் அனைத்து சிங்­கப்­பூர்­வா­சி­களும் வீட்­டி­லேயே இருந்து, கிருமி பர­வலை முறி­ய­டிக் ­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இணங்கி செயல்­ப­டு­வ­தற்­கான தேசிய முயற்­சி­யின் ஒரு பகு­தி­யா­கும் என்­றார் அவர்.