சிங்கப்பூரில் புதிதாக 334 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்றியிருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுட சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,252க்கு உயர்ந்துள்ளது.
புதிதாக இந்நோயைத் தொற்றியவர்களில் 189 பேர், ஏற்கெனவே அறியப்பட்ட நோய்ப்பரவல் குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். அத்துடன் 23 பேர், கொவிட்-19 கிருமியை உள்ளூரிலேயே தொற்றியவர்களுடன் தொடர்புடைவர்கள். எஞ்சியே 122 பேருக்கு இதுவரை எந்த தொடர்பும் அறிப்படவில்லை. இவர்களில் எவருக்கும் வெளிநாட்டில் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகளின் இயக்குநரான இணை பேராசிரியர் கென்னத் மாக் செய்தியாளர் கூட்டத்தில் இன்று தெரிவித்தார்.
இந்நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்ததாகவும் அமைச்சு கூறியுள்ளது. அவர் ஒரு எழுபது வயது சிங்கப்பூரர் என்றும் பிப்ரவரி 15ஆம் தேதியன்று 'ஜாய் கார்டன்' உணவகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு வந்தோரில் அவரும் ஒருவர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. மார்ச் 6ஆம் தேதியன்று இவருக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தேசிய தொற்றுநோய் நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அந்நிலையம், இறந்த முதியவரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவருக்கு உறுதி அளித்துவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவருடன், சிங்கப்பூரில்
இதுவரை குறைந்தது 15 ஊழியர் தங்குமிடங்கள் நோய்ப்பரவல் குழுமங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள. அவற்றில் எட்டு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.