பாதுகாப்பான இடைவெளி இல்லை: அமைச்சு விசாரணை

பாதுகாப்பான இடைவெளி இல்லை: அமைச்சு விசாரணை

1 mins read
6d2a243f-238c-4ee6-ad85-11322b30c975
ஒரு மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் லாரியில் அமர்ந்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அத்­தி­யா­வ­சிய சேவைத் துறை­களில் பணி­பு­ரி­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­களை லாரி­களில் அழைத்­துச் செல்­லும்­போது அவர்­க­ளுக்­கி­டையே போது­மான பாது­காப்பு இடை­வெளி இருப்­பதை உறுதி செய்­யாத ஏறத்­தாழ 30 நிறு­வ­னங்­க­ளி­டம் மனி­த­வள அமைச்சு விசா­ரணை நடத்தி வரு­கிறது.

நேற்று காலை 10 மணி அள­வில் 28 வாக­னங்­களை அதி­கா­ரி­கள் நிறுத்தி சோத­னை­யிட்­ட­னர். இந்த நட­வ­டிக்­கையை மனி­த­வள அமைச்சு, நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், போக்­கு­வ­ரத்து போலிஸ் ஆகி­யவை நடத்­தின. பாது­காப்­பான இடை­வெளி இல்­லா­மல் அமர்ந்­தி­ருந்த ஊழி­யர்­கள் லாரி­யி­லி­ருந்து இறங்க வேண்­டி­யி­ருந்­தது. அவர்­க­ளது முத­லா­ளி­க­ளு­டன் கைபேசி மூலம் அதி­கா­ரி­கள் தொடர்­பு­கொண்­ட­னர். இறக்­கி­வி­டப்­பட்ட ஊழி­யர்­களை அழைத்­துச் செல்ல இன்­னொரு வாக­னத்தை முத­லா­ளி­கள் அனுப்ப வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.