கார் பகிர்வுச் சேவை இனி சட்டவிரோதம்

கார் பகிர்வுச் சேவை இனி சட்டவிரோதம்

2 mins read
93f10095-55eb-4276-a21d-b5581ade06d3
புதிய விதிமுறையை மீறி கார் பகிர்வில் ஈடுபட்டால் 10,000 வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சில நிபந்தனைகளின் கீழ் டாக்சி அல்லாத மற்ற வாகனமோட்டிகள் கட்டணம் வாங்கி பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஆனால் கார் பகிர்ைவ அனு மதிக்கும் சட்டத்தை மீட்டுக்கொள் வதாக நேற்று போக்குவரத்து அமைச்சு அறிவித்தது.

இதனால் கட்டணம் வாங்கி பயணிகளை ஏற்றிச் ெசல்வது இனி சட்டவிரோதமாகும்.

நேற்று அமலுக்கு வந்த புதிய விதிமுறையை மீறுவோருக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிய குழுக்கள் இந்தச் சேவையை நிறுத்திவிட்டாலும் ஆகப் பெரிய குழு ஒன்று தொடர்ந்து செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.

ஓட்­டு­நர்­கள் தங்­க­ளு­டைய வாடகை கார்­க­ளைப் பயன்­ப­டுத்தி கட்­ட­ணம் வசூ­லித்து ஓரி­டத்­தி­லி­ருந்து மற்றோர் இடத்­திற்கு பய­ணி­களை ஏற்­றிச் செல்ல முடி­யும். கார் பய­ணத்­துக்­கான செலவை மட்­டுமே பய­ணி­க­ளி­ட­மி­ருந்து வசூ­லிக்க அனு­மதி வழங்­கப்­பட்­டது. அது மட்­டு­மல்­லா­மல் அவர்­கள் நாள் ஒன்­றுக்கு இரண்டு முறைக்கு மேல் பய­ணி­களை ஏற்­றிச் செல்ல முடி­யாது.

இந்த நிலை­யில் வர்த்­தக, தொழில் அமைச்­சு­டன் ஆலோ­சனை நடத்­திய நிலப்­போக்­கு­வ­ரத்து ஆணை­யம், இந்­தச் சேவையை அத்­தி­யா­வ­சி­ய­மற்ற சேவை­யாக வகைப்­ப­டுத்­தி­யது.

இத்­த­கைய சேவை­யில் ஈடு­படும் வாக­ன­மோட்­டி­கள் கிருமி பர­வலை முறி­ய­டிக்­கும் நட­வ­டிக்­கை­களை பின்­பற்ற வேண்­டும் என்­று ஆணை­யம் வலி­யு­றுத்­தி­யது.

தனி­யார் வாடகை கார் நிறு­வ­னங்­க­ளான கிராப்­பும் ரைட்­டும் ஏற்­கெ­னவே கார் பகிர்வுச் சேவையை நிறுத்­தி­விட்­டன.

எஸ்ஜி ஹைடெக்-பிரி­மி­யம் போன்ற சில உரை­யா­டல் குழு­வி­னர் கார் பகிர்வுச் சேவை­யில் ஈடு­பட்டு வந்­த­னர்.

அந்தக் குழு­வில் சுமார் 16,000 உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். இதே போன்று 10,000க்கு மேல் உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட 'எஸ்ஜி ஹைடெக் ஃபிமேல் டிரை­வர்ஸ் ரைடர்ஸ்' என்ற குழு­வும் கார் பகிர்வு சேவை­யில் ஈடு­பட்­டது. தற்­போது இந்த இரண்­டுமே கார் பகிர்வுச் சேவையை நிறுத்­தி­விட்­டன.

ஆனால் 50,000க்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட எஸ்ஜி ஹைடெக் என்ற குழு தொடர்ந்து கார் பகிர்வுச் சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.

இந்த அமைப்பின் ஓட்டுநர்களும் வாடிக்கையாளர்களும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை வைத்து அவர்கள் கார் பகிர்வுச் சேவையில் ஈடுபடுவதாக நம்பப்படு கிறது.