தாய்லாந்திலிருந்து திரும்பிய சிங்கப்பூரரான 32 வயது ஃபூ சிங் குவானுக்கு வீட்டிலேயே தங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை மீறி வெளியே சென்றதால் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 17ஆம் தேதி தாய்லாந்திலிருந்து திரும்பிய அவருக்கு மார்ச் 31ஆம் தேதி வரை வீட்டில் தங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மார்ச் 29ஆம் தேதி தனது சொந்த பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள செங்காங் சென்டிரலில் அவர் நண்பரைச் சந்தித்தாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது.

