கொவிட்-19க்கு எதிராக போரிடும் சிங்கப்பூர்: அச்சுறுத்தும் ஐந்து பலவீனங்கள்

கொவிட்-19க்கு எதிராக போரிடும் சிங்கப்பூர்: அச்சுறுத்தும் ஐந்து பலவீனங்கள்

3 mins read
a43f39bf-4468-44df-a913-fe469da6a41a
கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக சிங்­கப்­பூர் போரி­டு­கிறது. இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் நெருக்­கடி நிலையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஐந்து பல­வீ­னங்­களை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 5,000ஐ தாண்­டி­யுள்­ளது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பலர் வி­டு­தி­களில் தங்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக சிங்­கப்­பூர் போரி­டு­கிறது. இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் நெருக்­கடி நிலையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஐந்து பல­வீ­னங்­களை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

1) தங்கும் விடுதிகள் சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பலர் விடு­தி­களில் தங்­கு­கின்­ற­னர். ஒரே இடத்­தில் பலர் தங்­கு­வ­தால் பாது­காப்­பான இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­பது சவால்­மிக்­கது என்று கூறப்­ப­டு­கிறது. தங்­கு­மி­டங்­கள், தூங்­கு­மி­டங்­கள் ஆகி­யவை பகிர்ந்­து­கொள்­ளப்­ப­டு­வ­தால் கொரோனா கிருமி மின்­னல் வேகத்­தில் பர­வும் அபா­யம் உள்­ளது. அண்­மை­யில், விடு­தி­களில் தங்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்களுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பதே இதற்­குச் சான்று. கட்­டப்­பட்­டுள்ள 43 விடு­தி­களில் 19 விடு­தி­கள் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள குழு­மங்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு 2,000க்கும் மேற்­பட்­டோ­ருக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்­டுள்ள இந்த 19 குழு­மங்­களில் 12 குழு­மங்­கள் தனி­மைப்­ப­டுத்­தும் இடங்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. அங்­கி­ருக்­கும் அனைத்து ஊழி­யர்­களும் அவர்­க­ளது ஒறை­களில் 14 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

2) முதி­யோர் இல்­லங்­கள் கொரோனா கிரு­மித்­தொற்­றால் முதி­யோ­ருக்கு அதி­கம் ஆபத்து இருக்­கிறது. இந்­நோ­யின் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் மாண்ட பத்து பேரும் 60 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள். லீ ஆர் மூய் முதி­யோர் இல்­லம் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள குழு­ம­மா­கும். அங்கு வசிக்­கும் 16 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அங்கு வசித்த இரு­வர் மாண்­ட­னர். மாண்ட இரு­வ­ரும் அந்த இல்­லத்­தில் வசித்த 86 வயது மூதாட்­டி­கள்.

3) விதி­மு­றை­களை மீறு­ப­வர்­கள் பாது­காப்­பான இடை­வெளி விடா­மல் மற்­ற­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­வர்­க­ளால் கொரோனா கிரு­மித்­தொற்று பர­வும் அபா­யம் அதி­கம் உள்­ளது. இதற்கு சாஃப்ரா ஜூரோங்­கில் நடை­பெற்ற இரவு விருந்து ஓர் உதா­ர­ணம். கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர் அந்த விருந்­தில் கலந்­து­கொண்­டதை அடுத்து அடுத்­த­டுத்து 47 பேர் நோய்­வாய்ப்­பட்­ட­னர். ஒரே வீட்­டில் வசிக்­கும் குடும்­பத்­தி­ன­ரு­டன் மட்­டுமே நேர­டித் தொடர்பு வைத்­துக்­கொள்ள வேண்­டும். வீடு­களில், வெளி­யில் சமூக ஒன்­று­கூ­டல்­க­ளைத் தவிர்க்க வேண்­டும். தங்­க­ளு­டன் வசிக்­காத குடும்­பத்­தி­னர்­க­ளை­யும் தங்­கள் வீட்­டிற்கு அழைக்­கக்­கூ­டாது. கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க முடிந்­த­வரை வீட்­டி­லேயே இருக்க வேண்­டும். தேவை­யில்­லா­மல் வெளியே செல்­வோர், வெளியே செல்­லும்­போது முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­கள் ஆகி­யோ­ரால் கொரோனா கிருமி பர­வும் சாத்­தி­யம் அதி­கம் இருக்­கிறது. பொது­மக்­கள் நோய்ப் பர­வலை முறி­ய­டிப்­ப­தற்­கான திட்­டத்­துக்கு உட்­ப­டு­வதை உறுதி செய்ய ஒவ்­வொரு நாளும் 3,000 அம­லாக்க அதி­கா­ரி­களும் எஸ்ஜி சுத்­தம், சுகா­தா­ரப் பாது­காப்­பான இடை­வெளி தூதர்­கள் பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.

4) குழந்தை பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், பாலர் பள்­ளி­கள் உல­க­ளா­விய நிலை­யில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருக்­கிறது. ஆனால் சிறு­வர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் அவர்­கள் மூலம் அவர்­கள் வீட்­டில் இருக்­கும் முதி­ய­வர்­கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்­டுள்ள இரண்டு குழு­மத்­தில் 30 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. மொத்­தம் எட்டு சிறு­வர்­கள் 32 பெரி­ய­வர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. ஃபெங்ஷான் புளோக் 126ல் இருக்கு ஸ்பார்க்­கல்­டோட்ஸ் பாலர் பள்­ளி­யில் 27 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களில் 23 பேர் பெரி­யவர்­கள், நான்கு பேர் சிறு­வர்­கள். இம்­மா­தம் 8ஆம் தேதி­யி­லி­ருந்து குழந்தை பரா­ம­ரிப்பு நிலை­யங்­களும் பாலர் பள்­ளி­களும் அவை பொது­வாக வழங்­கும் சேவை­க­ளைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள்­ளன. அத்­தி­யா­வ­சி­யச் சேவைத் துறை­களில் பணி­பு­ரி­யம் பெற்­றோ­ரின் பிள்­ளை­கள் மட்­டும் அங்கு பார்த்­துக்­கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள்.

5) வேலை­யி­டங்­கள் அத்­தி­யா­வ­சிய சேவைத் துறை­யின்­கீழ் வரும் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்­கையை அர­சாங்­கம் குறைக்க திட்­ட­மிட்­டுள்­ளது. அதன்­வழி, மேலும் பலர் வீட்­டி­லேயே இருக்­க­லாம், இத­னால் கொரோனா கிரு­மிப் பர­வல் குறை­யும். தொடர்ந்து இயங்கி வரும் நிறு­வ­னங்­கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும். ஊழி­யர்­கள் வெவ்­வேறு நேரங்­களில் வேலை செய்­வது, ஒன்­றாக அமர்ந்து சாப்­பி­டு­வ­தைத் தவிர்ப்­பது, முகக்­க­வ­சங்­கள் அணி­வது போன்ற நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும்.