வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ ஆலோசனை கூறும் சிறப்புக் காணொளி

2 mins read
89d472df-13c5-4d8d-9a2f-5d9a2f753a0e
வெளிநாட்டு ஊழியர்களுக்கான காணொளியில் டாக்டர் குமரன் ராசப்பன் கிருமித் தடுப்பு உத்திகளைப் பகிர்ந்துகொள்கிறார். படம்: மனி­த­வள அமைச்சு ஃபேஸ்புக் பக்­கம் -

அற­நி­று­வ­னங்­க­ளுக்­காக நிதி திரட்ட, 2012ஆம் ஆண்­டில் எவ­ரெஸ்ட் சிக­ரத்தை எட்­டிய முதல் சிங்­கப்­பூர் இந்­தி­யர் டாக்­டர் கும­ரன் ராசப்­பன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவர் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் எலும்­பி­யல் மருத்­துவ நிபு­ண­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் அதி­க­ரித்து வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­ வ­ரத்­தின் தொடர்­பில் காணொளி ஒன்றை உரு­வாக்க உத­வி­யுள்­ளார்.

காணொ­ளி­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று எப்­படி பர­வு­கிறது என்று விளக்­கம் அளித்­துள்ள டாக்­டர் கும­ரன், அக்­கி­ரு­மி­யி­லி­ருந்து பாது­காத்­துக்­கொள்­ளும் உத்­தி­க­ளை­யும் பகிர்ந்­து­கொண்­டார்.

உடல்­ந­லம் சரி­யில்லை என்­றால் ஊழி­யர்­கள் தாங்கள் தங்­கும் விடுதியின் அதி­கா­ரி­யி­டம் உதவி நாட முன்­வ­ரு­மாறு அவர் அதில் கேட்­டுக்­கொண்­டார்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரத்­தைக் கண்டு அஞ்ச வேண்­டாம், பரிசோதனை செய்து­ கொள்ள முன்­வா­ருங்­கள், சுகா­தார ஊழி­யர்­க­ளா­கிய நாம் உங்­களை நன்­றா­கப் பார்த்­துக்­கொள்­வோம் என்ற செய்­தியை இந்­திய வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் வலி­யு­றுத்­து­வதே இக்­கா­ணொ­ளி­யின் நோக்­க­மா­கும்," என்று தெரி­வித்­தார் டாக்­டர் கும­ரன்.

தமிழ், ஆங்­கில மொழி­களில் வெளி­வந்­துள்ள இக்­கா­ணொளி, மனி­த­வள அமைச்­சின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் கடந்த வியா­ழக் கி­ழ­மை­யன்று பதி­வேற்­றம் செய்­யப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

இதன் தொடர்­பில் விழிப்­ பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் சிண்டா, இந்து அறக்­கட்­டளை வாரி­யம் போன்ற அமைப்­பு­களும் இந்­தக் காணொ­ளி­க­ளைச் சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் மற்ற தாய்­மொ­ழி­களில் இது­போன்ற காணொ­ளி­களை வெளி­யாக்­கும் முயற்சி நடைபெற்று வருகிறது என்று டாக்­டர் கும­ரன் கூறி­னார்.