ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரர் மீது இனவெறித் தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரர் மீது இனவெறித் தாக்குதல்

2 mins read
1f0fcb8d-582e-4e93-835a-b30c53cf2577
மாணவி ஒருவரை மற்றொருவர் தாக்குவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை நிகழ்ந்தது. காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம் -

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நக­ரில் சிங்­கப்­பூர் இளம்­பெண் ஒரு­வ­ரும் அவ­ரு­டைய மலே­சி­யத் தோழி­யும் தாக்­கப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் கடந்த புதன்­கி­ழமை நிகழ்ந்­தது.

பட்­டப் படிப்பு பயின்று வரும் அந்த 18 வயது சிங்­கப்­பூர் மாண­வி­யும் அவ­ரு­டைய 20 வயது நண்­ப­ரும் தாக்­கப்­பட்ட சம்­ப­வம் குறித்த காணொளி சமூக ஊட­கங்­களில் வலம் வரு­கிறது.

இன­வெ­றித் தாக்­கு­த­லாக நம்­பப்­படும் இந்­தச் சம்­ப­வத்­திற்கு ஆஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

சம்­பவ நாளன்று மாலை 5.30 மணி­ய­ள­வில் அவ்­வி­ரு­வ­ரும் மளி­கைப் பொருட்­கள் வாங்­கு­வ­தற்­காக சென்­று­கொண்­டி­ருந்­த­போது குவீன் விக்­டோ­ரியா சந்தை அருகே சந்­தே­கப் பேர்­வ­ழி­கள் இரு­வர் அவர்­களை வழி­ம­றித்து வசை­பாடி அடித்து உதைத்­த­னர்.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்­த­வர்­க­ளா­கக் கூறப்­படும் அந்­தத் தாக்­கு­தல்­கா­ரர்­கள் இரு­வ­ரும் சிங்­கப்­பூ­ர­ரை­யும் அவ­ரு­டைய நண்­ப­ரை­யும் நோக்கி 'கொரோனா கிருமி' எனத் திரும்­பத் திரும்ப கத்­தி­ய­தா­க­வும் கொலை மிரட்­டல் விடுத்­த­தா­க­வும் விக்­டோ­ரியா மாநில போலி­சார் தெரி­வித்­த­னர்.

அத்­து­டன், 'சீனா­விற்­குத் திரும்­பிச் செல்­லுங்­கள்' என்று அவர்­களை நோக்­கிச் சொன்­ன­தா­க­வும் அதற்­குப் பதி­ல­ளித்­த­போது அவ்­வி­ரு­வ­ரும் தாக்­கப்­பட்­ட­தா­க­வும் மெல்­பர்­னின் 'நைன் செய்தி' தெரி­வித்­தது.

தாக்­கு­த­லில் அவ்­வி­ரு­வ­ரும் இலே­சான காய­ம­டைந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இத்­தாக்­கு­த­லுக்கு அம்­மா­ண­வி­கள் பயி­லும் மெல்­பர்ன் பல்­கலைக்­க­ழ­கத்­தின் துணை­வேந்­த­ரும் மெல்­பர்ன் நகர மேய­ரும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

தாக்­கு­த­லின்­போது மாணவி ஒரு­வ­ரின் காத­ணி­பா­டி­கள் (AirPods) கீழே விழுந்­து­விட்­ட­தா­க­வும் அவற்றை அடை­யா­ளம் தெரி­யாத ஆட­வர் ஒரு­வர் எடுத்துக்­கொண்டு ஓடி­விட்­ட­தா­க­வும் சொல்­லப்­பட்­டது.

இச்­சம்­ப­வம் தொடர்­பில் மெல்­பர்­னை சேர்ந்த 21 வய­துப் பெண் ஒரு­வர் மீது நீதி­மன்­றத்­தில் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக போலிஸ் அறிக்கை தெரி­விக்­கிறது.

அந்­தப் பெண் வேறொரு வழக்­கில் பிணை பெற்று வெளி­யில் இருக்­கும்­போது இப்­படி இன­வெ­றித் தாக்­கு­த­லில் ஈடு­பட்­ட­தாகக் கூறப்­படுகிறது.

தாக்­கு­த­லில் ஈடு­பட்ட இன்­னொரு பெண்­ணை­யும் அவர்­

க­ளு­டன் இருந்த ஆட­வர் ஒரு­வ­ரை­யும் அடை­யா­ளம் காணும் முயற்­சியை போலி­சார் மேற்­கொண்­டுள்­ள­னர். அந்­தக் காணொ­ளி­யில் அவர்­கள் இரு­வரும் தென்­ப­ட­வில்லை.

இந்­தச் சம்­ப­வம் குறித்து அறிந்­துள்­ள­தா­க­வும் பாதிக்­கப்­பட்ட சிங்­கப்­பூர் மாண­விக்கு உத­வு­வ­தற்­காக கேன்­ப­ரா­வில் உள்ள சிங்­கப்­பூர் தூத­ர­கம் அவ­ரு­டன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் வெளி­யு­றவு அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரி­வித்­துள்­ளது.

அத்­து­டன், அந்­தச் சம்­ப­வம் குறித்து விசா­ரித்து, சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுப்­பதை உறு­தி­செய்­யும் வகை­யில் உள்­ளூர் அதி­கா­ரி­க­ளை­யும் சிங்­கப்­பூர் தூத­ர­கம் தொடர்­பு­கொண்­டுள்­ள­தாக அந்த அறிக்கை கூறி­யது.