இடம் தேடி முஸ்தஃபா சென்டர் அருகே வந்த நீர்நாய் குடும்பம்

இடம் தேடி முஸ்தஃபா சென்டர் அருகே வந்த நீர்நாய் குடும்பம்

2 mins read
8b5ff4d6-05e9-4fc4-9d22-22587e85a8fe
நியூட்டனில் உள்ள கூட்டுரிமை புளோக் நீச்சல் குளத்தில் காணப்பட்ட அதே நீர்நாய் குடும்பம்தான் இது. படம்: யூடியூப் -

கொரோனா கிரு­மி­ மனி­தர்­களை வீட்­டி­லேயே முடக்­கி­விட்­டது. நகர்­புற இடங்­களில் அவர்­க­ளின் ஆதிக்­கம் இல்லை என்­ப­தைத் தெரிந்துகொண்ட விலங்­கு­கள் அத்­த­கைய இடங்­களில் திரி­யத்­தொ­டங்கி இருக்­கின்­றன.

லிட்­டில் இந்­தியா பகு­தி­யில் முஸ்­தஃபா சென்­டர் அமைந்­துள்ள தெரு­வில் நீர்­நாய் குடும்­பம் ஒன்று காணப்­பட்­டது. அதைக் காட்­டும் காணொளி வாட்ஸ்­அப்பில் வலம் வரு­கிறது. அந்­தக் குடும்­பத்­தில் பெற்­றோர் இரண்டு பேரும் வயது வந்த குட்­டி­கள் மூன்­றும் சிறு குட்டிகள் இரண்­டும் அடங்­கும்.

டான் டோக் செங் மருத்­து­வ­மனைப் பகு­தி­யி­லும் நியூட்­டன் கூட்­டு­ரிமை புளோக் ஒன்­றின் நீச்­சல் குளத்­தி­லும் சென்ற மாதம் இதே நீர்நாய் குடும்­பம்­தான் காணப்­பட்­டது என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்கழ­கத்­தின் உயி­ரி­யல் துறை விரி­வுரையாளர் என் சிவ­சோதி கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டுள்­ளது.

இப்­படி இவை பரந்த இடத்­தில் இரை தேடி வரு­வ­தற்கு கொரோனா கட்­டுப்­பா­டு­களே கார­ணம் என்று தான் கரு­து­வ­தாக அவர் தெர­வித்­தார். கடந்த அக்­டோ­பர் மாதம் பிறந்த இந்தக் குட்டி­கள் பூம­லை­யில் வளர்ந்­து­வந்­தன.

ஆனால் எல்­லாம் வளர்ந்து விட்­ட­தால் வேறு பெரிய இடத்­தைத் தேட வேண்­டிய தேவை ஏற்­பட்­டு­விட்­டது. குட்­டி­களை வளர்க்க பூமலை நல்ல இடம்­தான். இருந்­தா­லும் நீண்­ட­கால போக்­கில் உண­வுக்கு அந்­தப் பகு­தி­யைச் சார்ந்து இருக்க முடி­யாது என்று திரு சிவ­சோதி விளக்­கி­னார்.

பெரும்­பா­லான இடங்­களை இதர நீர்­நாய் குடும்­பங்­கள் உண­வுக்­காக ஆக்­கி­ர­மித்­துக்­கொண்டு இருப்­ப­தால் இந்­தக் குடும்­பத்­துக்கு இடம் தேட வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

நீர்­நாய்­க­ளைப் பார்க்­கும்­போது அவற்­றுக்­கும் இடம் கொடுத்து தொலை­வில் இருந்து அவற்றை ரசித்து வாழ­விட்டு வாழும்­படி பொது­மக்­களை அந்த விரி­வு­ரை­யா­ளர் கேட்­டுக்­கொண்­டார்.