தேசிய பரா­ம­ரிப்பு நேரடி தொலைபேசி எண்­ணுக்கு 6,600 அழைப்புகள்

தேசிய பரா­ம­ரிப்பு நேரடி தொலைபேசி எண்­ணுக்கு 6,600 அழைப்புகள்

1 mins read
8c7f93ef-2b98-4fbf-8879-b3ead2a0ce11
சிங்­கப்­பூ­ரில் இம்­மா­தம் 10ஆம் தேதி அறி­மு­கம் செய்­யப்­பட்ட தேசிய பரா­ம­ரிப்பு நேரடி அழைப்பு எண்­ணுக்கு இரண்டு வார காலத்தில் 6,600க்கும் மேற்­பட்ட அழைப்­பு­கள் வந்­துள்­ள­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார்.  படம்: டெஸ்மண்ட்/ஃபேஸ்புக் -

சிங்­கப்­பூ­ரில் இம்­மா­தம் 10ஆம் தேதி அறி­மு­கம் செய்­யப்­பட்ட தேசிய பரா­ம­ரிப்பு நேரடி அழைப்பு எண்­ணுக்கு இரண்டு வார காலத்தில் 6,600க்கும் மேற்­பட்ட அழைப்­பு­கள் வந்­துள்­ள­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார்.

நாள் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக 380 அழைப்­பு­கள் வந்­த­தாக இது கருதப்­படும். தினந்­தோ­றும் வரும் மொத்த அழைப்­பு­களில் 40 விழுக்­காடு அல்­லது 170 அழைப்­பு­கள் பயிற்சி பெற்ற நிபு­ணர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும். எஞ்­சிய அழைப்­பு­கள் சிறப்­புத் தேவை உள்­ளோ­ருக்­கான உதவி அமைப்­பு­க­ளுக்கு மாற்­றி­விடப்­பட்­டன. கொவிட்-19 நெருக்­கடி காலத்­தில் உள­வி­யல் ரீதி­யா­க­வும் உணர்வு ரீதி­யா­க­வும் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்கு ஆத­ரவு வழங்­கும் நோக்­கில் தொடங்­கப்­பட்ட இந்த 24 மணி நேர சேவை­யில் கிட்­டத்­தட்ட 500 தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­பட்டு உள்­ள­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

உள­வி­யல் நிபு­ணர்­கள், ஆலோ­ச­கர்­கள், சமூக ஊழி­யர்­கள், மன­நல மருத்­து­வர்­கள், அர­சாங்க அதி­கா­ரி­கள் உள்­ளிட்ட 22 முதல் 25 பேர் வரை­யி­லான குழு எட்டு மணி நேர கணக்­கில் நாளுக்கு மூன்று முறை­மாற்று (ஷிஃப்ட்) அடிப்­ப­டை­யில் சேவை­யாற்­று­கிறது. இந்த நெருக்­கடி காலத்­தில் வெவ்­வேறு சவால்­க­ளைச் சந்­திக்­கும் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மி­ருந்­தும் வரும் அழைப்­பு­கள் தனித்­து­வ­மிக்­கது என்­றும் அவர் கூறினார்.