நாளை நோன்புப் பெருநாள். இவ்வாண்டு கொவிட்-19 கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதற்கு மத்தியில் முஸ்லிம்கள் தங்களின் பெருநாளைக் கொண்டாட உள்ளனர். கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த சில நாட்களாகவே கேலாங் சிராய் சந்தைக்கு மக்கள் படையெடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர். சந்தை அமைந்துள்ள இடத்திற்குள் செல்வதற்கு வாடிக்கையாளர்கள் காலையிலிருந்தே வரிசை பிடித்து நிற்கத் தொடங்கி விடுகின்றனர். இவ்வாறு நேற்று அங்கு கூடிய கூட்டத்தின் வரிசை நீண்டுகொண்டே அருகிலிருந்த நடைபாதைகளுக்கும் வழிந்து சென்றுவிட்டது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்