பிரதமர் லீ சியன் லூங் முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் நேற்றிரவு வாழ்த்துகளைப் பரிமாறிய அவர், “நமது முஸ்லிம் நண்பர்கள் கொவிட்-19 சூழல் காரணமாக இவ்வாண்டு சற்று வித்தியாசமாகக் கொண்டாடுவார்கள். ஆயினும் தங்களது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திக்க ஆக்கபூர்வமான வழிகளை அவர்கள் கண்டறிந்து உள்ளனர்.
“கடினமான காலகட்டமாக இருப்பினும் இந்த விழாக் காலத்தில் நாம் ஒருவர் மூலம் ஒருவர் பலம் பெறுவோம். முஸ்லிம் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்,” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முரசு நாளிதழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.