அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு லோ தியா கியாங் பூரண குணமடைந்து கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்று பாட்டாளிக் கட்சி நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
அக்கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளரான திரு லோ, தற்போது மருத்துவமனை விடுப்பில் இருப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 30ஆம் தேதி யன்று 63 வயதாகும் திரு லோ, தமது வீட்டில் விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு, கூ டெக் புவாட் மருத்துவமனை யின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மே 4ஆம் தேதி அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.