நோன்புப் பெருநாள் மகிழ்ச்சியைத் தங்கள் தாய்நாட்டில் இருக்கும் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு 44,000 வெளிநாட்டு ஊழியர்களின் கைபேசிக் கட்டண அட்டையில் $10 நிரப்பப்பட்டது
தங்களது எம்1, சிங்டெல், ஸ்டார்ஹப் கட்டண அட்டையில் இம்மாதம் 1ஆம் தேதியன்று பணம் இல்லாதவர்களின் கட்டண அட்டை களுக்கு $10 தானியக்க முறையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை நிரப்பப்பட்டது என்று TWC2 எனும் வெளிநாட்டு ஊழியர் நல அமைப்பு நேற்று தெரிவித்தது.
நோன்புப் பெருநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்பட்டது.
இத்திட்டத்துக்கான பெரும்பாலான நிதியாதரவை ஃபேஸ்புக், சிங்கப்பூர் சமூக அறநிறுவனம் ஆகியவை வழங்கின என்றும் TWC2 அமைப்பு கூறியது.
இச்சலுகையுடன், மேலும் 10,000 பணம் நிரப்பும் கட்டண அட்டைகள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களின் கைபேசி கட்டண அட்டையில் பணம் நிரப்பி உதவும் TWC2 அமைப்பின் திட்டம் வழி கடந்த ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து இது வரை $1 மில்லியன் செலவிடப் பட்டுள்ளது.
இவ்வியக்கம் இதுவரை 90,000க்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவியுள்ளது என்று தெரிவித்த TWC2 அமைப்பு, சிங்கப்பூரில் பணியாற்றும் கட்டுமான ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இவர்கள் என்றும் கூறியது.
கைபேசி கட்டண அட்டையில் பணம் நிரப்பும் இத்திட்டம் கொவிட்-19 கிருமித்தொற்று கார ணமாக புதிதாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உதவியுள்ளது.
சுகாதார அமைச்சு அதிகாரிகள் அந்த வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்புத் தடங்களைக் கண்டறியவும் இந்தத் திட்டம் உதவி யிருக்கிறது.
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட பிறகு தங்கள் உடமைகளை அவர்கள் எடுக்க முடியவில்லை என்பதால், அவர்கள் தங்கியிருக்கும் மருத்துவமனைகளுக்கு கைபேசி மின்னேற்றிக் கருவிகள் அனுப்பப்பட்டன.
“எங்களைப் போன்ற சிறிய அரசு சார்பற்ற அமைப்பால் இதுபோன்ற பெரிய திட்டங்களை எங்களுக்கு ஆதரவு அளித்துள்ள பல அமைப்புகளின் உதவியின்றி செய்திருக்க முடியாது,” என்றார் TWC2 அமைப்பின் தலைவர் திருவாட்டி டெபி ஃபோர்டிஸ்.