இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 611 பேருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தவாசிகள் என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்றைய எண்ணிக்கையைச் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் 33,860 பேருக்குக் கிருமித் தொற்று இதுவரை ஏற்பட்டுள்ளது.
மேல் விவரங்கள் பிறகு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.