அடுத்த மாதம் 2ஆம் தேதியிலிருந்து பாலர் பள்ளிகள் மீண்டும் இயங்க இருக்கின்றன. கொரோனா கிருமித்தொற்றால் மாணவர்
களுக்குப் பாதிப்பு ஏற்படாதிருக்க பாலர் பள்ளிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. புளோக் 491
அட்மிரல்டி லிங்க்கில் உள்ள ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர் பள்ளிக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று சென்று பார்வையிட்டார். வகுப்புகளில் பாதுகாப்பான தூர இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்றார் அமைச்சர்.