ஜூன் 2 முதல் வேலைக்குத் திரும்பும் ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகளை மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்டது.
தங்கும் விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு ஊழியர்களும் அவர்
களது முதலாளிகளும் தங்கும் விடுதிகளை நடத்துபவர்களும் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
ஊழியர்கள் வேலைக்குத் திரும்பவதற்கு முன்பு அவர்களுக்கு வெவ்வேறு நாட்களில் ஓய்வு வழங்கப்பட வேண்டும்.
தங்கும் விடுதிகளில் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அவர்களது முதலாளிகளுடன் தங்கும் விடுதிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சு கூறியது.
தங்கும் விடுதிகளைவிட்டு வெளியேறும், உள்ளே வருவோரைக் கண்காணிப்பது, வேறு புளோக்குகள், மாடிகளில் தங்கும் ஊழியர்களுடன் மற்ற ஊழியர்கள் தொடர்புகொள்ள முடியாதபடி தடுப்புகளை அமைப்பது, ஊழியர்களின் உடல்நிலையைக் கண்காணிப்பது, தங்கும் வசதிகளில் தனிமைப்படுத்தும் இடங்களை அமைப்பது போன்றவை இதில் அடங்கும்.
தங்கும் விடுதிகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு
இந்தப் புதிய விதிமுறைகளை விளக்கிக் கூறி புரிய வைப்பது தங்கும் விடுதிகளை நடத்துபவர்களின் கடமை என்று அமைச்சு தெரிவித்தது. விதிமுறையை மீறும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறு அளவிலான அபராதத்தை தங்கும் விடுதி நடத்தும் நிறுவனங்கள் விதிக்கலாம் என்று அமைச்சு கூறியது.
வேலைக்குச் செல்லும்போது மட்டும் தங்கும் விடுதிகளைவிட்டு அங்கு தங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்லலாம்.
தங்கள் முதலாளிகள் வழங்கும் போக்குவரத்தை மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
வேலை முடிந்ததும் அவர்கள் உடனடியாக தங்கும் விடுதிகளுக்குத் திரும்புவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.
ஓய்வு நாட்களில் வெளியே செல்ல வெளிநாட்டு ஊழியர்
களுக்கு அனுமதி இல்லை. ஓய்வு நாட்களிலும் அவர்களுக்கு உணவு, அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
வேலைக்குத் திரும்ப தகுதி பெறாத ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.