சிங்கப்பூரில் புதிதாக 544 பேருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று இன்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் நால்வர் சமூகத்தில் பரவியுள்ள கிருமித் தொற்று சம்பவங்கள்.
அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர். மற்ற மூவர் வேலை அனுமதி சீட்டு வைத்துள்ளவர்கள்.
மற்ற அனைத்து கிருமித் தொற்று சம்பவங்களும் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் ஏற்பட்டவை.
நோய்ப் பரவல் குறித்த மேல் விவரங்களை சுகாதார அமைச்சு பின்னர் அறிவிக்கும்.