பாரந்தூக்கியை இயக்கும் ஊழியர் மரணம்

பாரந்தூக்கியை இயக்கும் ஊழியர் ஒருவர், அந்தப் பாரந்தூக்கிக்கும் லாரி ஒன்றின் கதவுக்கும் இடையே சிக்குண்டு உயிரிழந்திருக்கிறார்.

டிஎன்கேஎச் தளவாட நிறுவனத்தின் பெஞ்சுரு ரோட்டில் 62 வயது சிங்கப்பூர் ஆடவர் பாரந்தூக்கியை இயக்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் லாரி ஒன்றுக்குப் பக்கத்தில் நிறுத்தி அதன் கதவுகளைத் திறக்க முயன்றார்.

ஆனால் பாரந்தூக்கி திடீரென பின்திசையின் சென்றபோது அவர் பாரந்தூக்கியின் அடிச்சட்டத்திற்கும் லாரியின் கதவுக்கும் இடையே சிக்கினார்.

பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் போலிசாருக்கும் இந்தச் சம்பவம் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் அவர் அசைவின்றிக் கிடந்தவாறு காணப்பட்டார்.

சுயநினைவு இழந்த நிலையில் அவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். கடுமையான காயங்களால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்வதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!