குறைந்த வருமானமுள்ள 49 வயதுக்கு மேற்பட்ட, 20 வயதுக்கும் குறைவான குறைந்தது ஒரு பிள்ளையைக் கொண்டுள்ள சிங்கப்பூரர்கள் இம்மாதம் 1,000 வெள்ளியைப் பெறுவர்.
இந்தச் சலுகையுடன் ஒருமைப்பாட்டு கட்டணம் மற்றும் அரவணைப்பு, ஆதரவுத் திட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள மொத்த தொகை 3.5 பில்லையன் வெள்ளியை எட்டியுள்ளது.
அரவணைப்பு, ஆதரவுத் திட்டத்தின்கீழ் இரண்டாவது சுற்றாகக் கொடுக்கப்படும் தொகை ஜூன் 18ஆம் தேதி முதல் கொடுக்கப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்தது.