ஊழியர் தங்கும் விடுதிகள் மூன்றிலும் ஊழியர்கள் வேலைசெய்யும் இடம் ஒன்றிலும் கொரோனா கிருமித்தொற்றுக்குழுமங்கள் புதிதாக உருவாகியுள்ளன.
ஊழியர்கள் வேலைசெய்யும் அந்த இடம் கம்போங் பூகிஸில் உள்ளது. 212 தாகூர் லேன், 63 துவாஸ் சவுத் அவென்யூ 1, 109 ஊபி அவென்யூ 4 ஆகிய இடங்களில் மேற்கூறப்பட்ட மூன்று தங்கும் விடுதிகள் உள்ளன.
சமூகப் பரவலால் பாதிக்கப்பட்ட 15 பேரில் எவரும் சிங்கப்பூரர்கள் அல்ல என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
புதிதாக பாதிக்கப்பட்ட பேரில் இருவர் நிரந்தரவாசிகளாகவும் அறுவர் வேலை அட்டைதாரர்களாகவும் எழுவர் வேலை அனுமதி அட்டைதாரர்களாகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியக் குடிமக்கள்.
இந்த 15 பேரிடத்தில் கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. முன்னதாக இந்நோயைத் தொற்றியவர்களுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் இவர்களுக்கு சுவாப் சோதனை செய்யப்பட்டது இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.