முஸ்லிம் சமூகத்திடமிருந்து பெற்ற 4.9 மில்லியன் வெள்ளியை, பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் மதராசாவுக்கும் இதர உதவி அமைப்புகளுக்கும் வழங்கப்படும்.
முயிஸ் நிர்வகிக்கும் அறக்கட்டளை சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருமானம் பிரித்து விநியோகிக்கப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முயிஸ் தெரிவித்தது.
கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு ஒரு விழுக்காடு கூடுதலாக நிதி கிடைத்துள்ளதாகவும் அது கூறியது.
முயிஸ் தற்போது 91 அறக்கட்டளை சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் மொத்த மதிப்பு 800 மில்லியன் வெள்ளி ஆகும். கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு பள்ளிவாசல்கள், மதராசாக்கள், முஸ்லிம் அமைப்புகளுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.