கொவிட்-19க்கு மருந்து; சிங்கப்பூர் பரிசோதனை

2 mins read
6170de55-b7a1-4dda-85a0-3fec679edfc1
புதிய மருந்து கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தோடு இதர தொற்­று­க­ளைத் தடுக்­க­வும் பயன்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்­கும் என்று டைசான் நிறு­வ­னத்­தைத் தோற்­று­வித்­த­வர்­களில் ஒரு­வ­ரான பேரா­சி­ரி­யர் ஊய் எங் இயோங் தெரி­வித்­தார். படம்: ஏஎப்பி -

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்­கான மருந்தை மனி­தர்­க­ளி­டம் சோதித்­துப் பார்க்க இருக்­கிறது சிங்­கப்­பூர். அடுத்த வாரம் தொடங்­கும் பரி­சோ­தனை திட­காத்­தி­ர­மாக உள்ள 23 பேரி­டம் நடத்­தப்­பட உள்­ளது.

சிங்­கப்­பூ­ரைத் தள­மா­கக் கொண்ட உயிர்­தொ­ழில்­நுட்ப நிறு­வ­ன­மான டைசான் உரு­வாக்கி இருக்­கும் மருந்­தின் முதற்­கட்ட பரி­சோ­தனை முயற்­சியை சிங்­ஹெல்த்­தின் மருத்து ஆராய்ச்­சிப் பிரிவு மேற்­கொள்­ளும். இந்­தப் பரி­சோ­தனை கிட்­டத்­தட்ட ஆறு வாரங்­க­ளுக்கு நீடிக்­கும்.

TY027 எனப்­படும் அந்த மருந்து நோய்த்­ த­டுப்பு ஆற்­றலை கொண்­டி­ருக்­கி­றதா என்­றும் பாது­காப்­பானதா என்­றும் பரி­சோ­திக்­கப்­படும். சார்ஸ்-கொவ்-2 என்­னும் கிரு­மியே கொவிட்-19 உரு­வா­கக் கார­ணம் என்­ப­தால் அத­னைத் தடுக்­கும் சக்தி புதிய மருந்­துக்கு உள்­ளதா என சோத­னைக்­குப் பின் தீர்­மா­னிக்­கப்­படும் என டைசான் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

"நோயா­ளி­க­ளி­டம் கொவிட்-19 நோயின் தீவி­ரத்­தைத் தணிப்­ப­தோடு அவர்­கள் கிரு­மித் தாக்­கத்­தி­லி­ருந்து மீண்டு குண­ம­டை­வதை விரை­வாக்­குவ­தற்­கான சிகிச்­சையை அளிப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டது TY027. அத்­து­டன் தொற்­றுக்கு எதி­ரான தற்­கா­லிக பாது­காப்பை அளிக்­கக்­கூ­டிய வல்­ல­மையை அது பெற்­றி­ருக்­கும்," என டைசான் நிறு­வ­னம் தெரி­விக்­கிறது.

முதற்­கட்ட பரி­சோ­தனை வெற்­றி­ய­டைந்­தால் அதற்­க­டுத்­த­தாக அதி­க­மான தொண்­டூ­ழி­யர்­க­ளின் உட­லில் செலுத்தி நோய் எதிர்ப்பு ஆற்­றலை சோதிக்க அரசாங்க அமைப்பிடம் அனு­மதி கோரப்­படும் என்­றும் அது கூறி­யது.

தற்­போ­தைக்கு கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிப்­பதே நோக்­கம். அதன் பின்­னர் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் அல்­லது வெளி­நாட்­டுப் பய­ணி­கள் ஆகி­யோ­ருக்­கான இதர வகை தொற்­றுக்­குப் பயன்­

ப­டுத்த முடி­யுமா என்­பது அடுத்­த­டுத்த சோதனை முடி­வு­க­ளைப் பொறுத்­தது.

இந்­தப் புதிய மருந்து கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தோடு இதர தொற்­று­க­ளைத் தடுக்­க­வும் பயன்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்­கும் என்று டைசான் நிறு­வ­னத்­தைத் தோற்­று­வித்­த­வர்­களில் ஒரு­வ­ரான பேரா­சி­ரி­யர் ஊய் எங் இயோங் தெரி­வித்­தார்.

டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வக் கழ­கத்­தில் பணி­யாற்­றும் இவர், "பாது­காப்­பா­னது என்று உறு­தி­யா­ன­தும் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களை கிருமி தொற்­றா­மல் இருக்­க­வும் இம்­ம­ருந்து தரப்­ப­ட­லாம்," என்­றார்.

"இன்­னொரு உதா­ர­ணத்­தை­யும் சொல்­ல­லாம். சிங்­கப்­பூ­ரில் இருந்து கொவிட்-19 கிரு­மித்­தொற்று அதி­க­மாக உள்ள இடங்­க­ளுக்­குச் செல்­லும்­போது அந்­தக் கிருமி தொற்­றி­வி­டா­மல் தடுக்க இந்த மருந்து உத­வக்­

கூ­டி­ய­தா­க­வும் இருக்­கும்," என்­றும் பேரா­சி­ரி­யர் ஊய் தெரி­வித்­தார். ஏற்­கெ­னவே ஸிக்கா கிரு­மிக்கு மருந்து கண்­டு­பி­டிக்­கும் முயற்சியில் ஈடுபட்டது டைசான் நிறு­வ­னம்.

முதற்கட்டமாக திடகாத்திரமான 23 பேருக்கு செலுத்தப்படும்