கொவிட்-19: 3.67 மில்லியன் முகக்கவசங்கள் விநியோகம்; நாளை மாலை வரை பெறலாம்

கொவிட்-19: 3.67 மில்லியன் முகக்கவசங்கள் விநியோகம்; நாளை மாலை வரை பெறலாம்

2 mins read
fd775d3d-c03f-4b28-9094-87a76c6926e7
பீஷான் சமூக மன்றத்தில் மே 26ஆம் தேதி இயந்திரம் ஒன்றில் இருந்து முகக் கவசத்தைப் பெறுவதற்காக பலரும் வரிசைப் பிடித்து நின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொதுமக்­க­ளுக்கு முகக்­க­வ­சம் வழங்­கும் நடை­முறை நாளை ஞாயிற்­றுக்­கிழமை முடி­வ­டை­கிறது. இந்­நி­லை­யில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை 8 மணி நில­வ­ரப்­படி சுமார் 3.67 மில்­லி­யன் முகக்­க­வ­சங்­கள் மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்டு உள்­ளன.

அந்­தக் கவ­சங்­களைப் பல­முறை பயன்­ப­டுத்­த­லாம். அவற்­றில் 30 விழுக்­காடு அல்­லது 1.1 மில்­லி­யன் கவ­சங்­களை 24 மணி நேர­மும் செயல்­படும் இயந்­தி­ரங்­களில் இருந்து மக்­கள் பெற்­றுக்­கொண்­டார்­கள். எஞ்­சி­ய­வற்றைச் சமூக மன்றங்கள், வசிப்­போர் குழு நிலை­யங்­கள் ஆகி­ய­வை விநியோகித்தன.

இந்த விவ­ரங்­களை மக்­கள் கழ­கம் தெரி­வித்து உள்­ளது. சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கார­ண­மாக நடப்­புக்கு வந்த கட்­டுப்­பா­டு­கள் கட்­டம் கட்­ட­மா­கத் தளர்த்­தப்­ப­டு­கின்­றன. இந்த நிலை­யில் முன்­னி­லும் அதி­க­மா­ன­வர்­கள் வேலை­யி­டங்­களுக்­குத் திரும்­பு­கி­றார்­கள். அல்­லது சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டத் தொடங்­கு­கி­றார்­கள்.

இப்­போ­தைய கால­கட்­டத்­தில் வீட்­டை­விட்டு வெளியே செல்­வோர் முகக்­க­வ­சம் அணிந்­திருக்க வேண்­டும் என்­பது கட்­டா­யம். இந்த விதியை மீறு­வோ­ருக்கு அப­ரா­தம் விதிக்கப்பட்டு வருகிறது.

முகக்­க­வ­சங்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள விரும்­பு­வோர் நாளை மாலை 6 மணிக்­குள் எல்லா சமூக நிலை­யங்­க­ளி­லும் தங்­க­ளு­டைய அடை­யாள அட்­டை­யைப் பயன்­படுத்தி பெற­லாம் என்று கழ­கம் நினை­வூட்டி இருக்­கிறது.

பணிப்­பெண்­களும் விடு­தி­களில் தங்­கி­யி­ராத வெளி­நாட்டு ஊழி­யர்­களும் ஹோட்­டல்­களில் தங்கி இருக்­கும் அனைத்­து­லக மாண­வர்­களும் இந்த முகக்­கவச விநி­யோ­கத் திட்­டத்­தில் பயன் அடை­ய­லாம்.

விடு­தி­களில் தங்கி இருக்­கும் ஊழி­யர்­க­ளுக்கு மனி­த­வள அமைச்­சின் முக­வர்­கள் முகக்­க­வ­சங்­களை விநி­யோ­கிக்­கி­றார்­கள்.

துணி­யால் ஆன முகக்­க­வ­சங்­களை விநி­யோ­கிக்­கும் நடை­முறை மே 26ஆம் தேதி தொடங்­கி­யது. இந்த மூன்­றா­வது கட்­டத்­தில் மக்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்ட முகக்­க­வ­சங்­கள், இரண்­டாம் கட்­ட­மாக ஏப்ரல் மாதம் விநி­யோ­கிக்­கப்­பட்ட முகக்­கவசங்­க­ளை­விட அதிக காலம் நீடித்து உழைப்­பவை.

அதிக பாது­காப்­புத் தன்­மை­களைக் கொண்­டவை. மிக­வும் வச­தி­யா­னவை என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் முன்­ன­தா­கத் தெரி­வித்திருந்­தார்.

பிப்­ர­வ­ரி­யில் முதல் கட்­டத்­தில் ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் நான்கு முகக்­க­வ­சங்­கள் கொடுக்­கப்­பட்­டன.

இரண்­டா­வது சுற்­றின்­போது கொடுக்­கப்­பட்ட முகக்­க­வ­சங்­க­ளை­யும் சேர்த்து பார்த்­தால் சிங்­கப்­பூர் ஏழு மில்­லி­ய­னுக்­கும் அதிக துணி­யால் ஆன முகக்­க­வ­சங்­களை விநி­யோ­கித்து இருக்­கிறது.