சிங்கப்பூரர்கள் தொடர்பான வதந்தி: மலேசிய அமைச்சர் போலிசில் புகார்

சிங்கப்பூரர்கள் தொடர்பான வதந்தி: மலேசிய அமைச்சர் போலிசில் புகார்

1 mins read
e9153c5e-fab2-44a0-9510-be699c48fb46
சிங்­கப்­பூ­ரர்­களை மலே­சியா அனு­ம­திக்­காது என்று தாம் கூறி­ய­தா­கப் பரவும் தகவல் தகவல் என்றும் அது குறித்து தாம் போலிசில் புகார் செய்துள்ளதாகவும் மலே­சிய மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் கூறி உள்­ளார். கோப்புப்படம்: எஸ்டி, லிம் யாவுய் -

சிங்­கப்­பூ­ரர்­களை மலே­சியா அனு­ம­திக்­காது என்று தாம் கூறி­ய­தா­கப் பர­வும் தக­வல் பொய் என்று மலே­சிய மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் கூறி உள்­ளார். மேலும் சமூக ஊட­கத்­தில் இந்த வதந்­தி­யைப் பரப்பி விட்­டோர் மீது நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி போலி­சில் தாம் புகார் அளித்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் நேற்று தெரி­வித்­தார்.

"மலே­சி­யா­வின் எல்­லைப் பகு­தி­கள் அனைத்­தும் மூடப்­பட்டு, சிங்­கப்­பூ­ரர்­கள் உள்­ளிட்ட எந்த நாட்­டி­ன­ரும் மலே­சி­யா­வுக்­குள் வர இய­லாத நிலை­யில் இது­போன்ற தீய செய்­தி­களை நம்ப வேண்­டாம்.

"இச்­செ­யல் மலே­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான உற­வில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் நோக்­கம் கொண்­டது. இவ்­வி­வ­கா­ரத்­தில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு போலி­சி­ட­மும் மலே­சிய தொடர்பு மற்­றும் பல்­லூ­டக ஆணை­யத்­தி­ட­மும் புகார் அளித்­தி­ருக்­கி­றேன் என இஸ்­மா­யில் சாப்ரி தமது டுவிட்­ட­ரில் குறிப்­பிட்டுள்­ளார். பயணக் கட்டுப்பாடு களைத் தளர்த்த சிங்கப்பூரும் மலே சியாவும் பேச்சு நடத்தி வருகின்றன.