அமைச்சர் ஜோசஃபின் டியோ: குறைந்த சம்பள ஊழியருக்கு தொடர்ந்து வேலை, ஊதியம்

அமைச்சர் ஜோசஃபின் டியோ: குறைந்த சம்பள ஊழியருக்கு தொடர்ந்து வேலை, ஊதியம்

2 mins read
23fdb45b-56a8-4a3c-8cdd-753f7b546410
-

குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் பல­ரும் கொவிட்-19 கட்­டுப்­பாட்­டுக் காலத்­தில் தொடர்ந்து ஊதி­யத்­து­டன் வேலை பார்த்து வரு­கி­றார்­கள் என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­தார்.

அவர்­கள், அத்­தி­யா­வ­சிய சேவை­களில் பணி­யாற்­று­வதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். சிங்­கப்­பூ­ரில் 2019 கடைசி மூன்­றாண்டு காலங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் மொத்த வேலை­யின்மை விகி­தம் அதி­க­ரித்து இருக்­கிறது.

இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளின் நிலை எப்­படி இருக்­கிறது என்­பது பற்றி பல­ரும் கேள்வி எழுப்­பி­னர்.

அவற்­றுக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் அமைச்­ச­ரின் விளக்­கம் இடம்­பெற்­றது.

கொவிட்-19 கார­ண­மாக பொரு­ளி­ய­லுக்கு ஏற்­பட்டு வரும் பெரும் பாதிப்­பு­க­ளின் விளை­வாக பல நிறு­வ­னங்­களும் வேலை நேரத்­தைக் குறைத்­துள்­ளன.

அல்­லது பல­ரை­யும் தற்­கா­லி­க­மாக வேலை­யை­விட்டு நிறுத்தி இருக்­கின்­றன. இப்­படி செய்­வ­தன் மூலம் நிறு­வ­னங்­கள் செல­வைக் குறைக்க முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. இத­னால் ஆட்­கு­றைப்­பும் அதி­க­ரித்­துள்­ளது.

இத்­த­கைய ஒரு சூழ­லில் குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்கு வேலை போனால் அவர்­க­ளுக்­குப் பாதிப்பு மேலும் கூடி­வி­டும் என்று கவலை தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­நிலை தொடர்­பில் விளக்­கம் அளித்த திரு­வாட்டி டியோ, கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கும் கால­கட்­டத்­தில் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற நிறு­வ­னங்­கள்­தான் செயல்­ப­டவில்லை என்றார்.

ஆனால் உயிர்­நா­டி­யான அத்­தி­யா­வ­சிய சேவை­கள் தொடர்ந்து இயங்கி வரு­கின்­றன. இத்­த­கைய சேவை­க­ளில்­தான் குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் அதி­கம் வேலை பார்க்­கி­றார்­கள் என்­ப­தை அமைச்சர் சுட்­டிக்காட்­டி­னார்.

குறைந்த வரு­மான ஊழி­யர்­களில் ஏரா­ள­மா­ன­வர்­கள் அத்­தி­யா­வ­சிய வேலை­க­ளைப் பார்ப்­ப­தா­கத் தெரி­கிறது. ஆகை­யால் அவர்­கள் தொடர்ந்து வேலை பார்க்க முடி­யும். என்­றா­லும் அத்­த­கைய ஊழி­யர்­களைக் கைதூக்­கி­வி­டு­வதே சிறு, குறு காலங்­களிலும் நீண்­ட­கால நோக்­கி­லும் அர­சாங்­கத்­தின் விருப்­பம் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

முதிய ஊழி­யர்­கள், இதர ஊழி­யர்­க­ளுக்கு அர­சாங்­கம் அளிக்­கும் உத­வி­களையும் அவர் சுட்­டி­னார். ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம், நல்­வாழ்வு ஆகி­ய­வற்றை முறை­யாக கவ­னித்து வரும்­படி நிறு­வ­னங்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்டு இருக்­கிறது என்று தெரி­வித்த அமைச்­சர், இதன் தொடர்­பில் முத்­த­ரப்பு பங்­கா­ளி­க­ளு­டன் மனி­த­வள அமைச்சு சேர்ந்து செயல்­பட்டு இருப்­ப­தா­கத் தெரிவித்தார்.