‘சமூக ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்’

உலகப் பொருளியல் சரிவை சிங்கப்பூரால் தடுக்க முடியாது.ஆனால், அது உலகின் பல நாடுகளில் தெரியும் சமூக ஒற்றுைமயின்மை, ஒடுங்கும் போக்கு, விரக்தி மனப்பான்மை ஆகியவற்றை முழுமையாகத் எதிர்த்து செயல்பட சிங்கப்பூரர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்.

உலகப் பொருளியலை கொரோனா கிருமித்தொற்று ஆட்டிப்படைக்கும் இந்த வேளையில், சிங்கப்பூரர்கள் தங்களிடையேயான ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.

இதில், அவர்கள் வேலையிழந்தோருக்கு வேலை தேடித்தர, சமுதாயத்தில் ஒருவர் மேல்நிலைக்குச் செல்ல உதவும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும், சிரமங்கள் ஏற்படும்போது உதவி கிடைத்திடும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டவும் வேண்டும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய திரு தர்மன், மூத்த ஊழியர்கள் வேலை கிைடக்க சிறப்பு உதவி பெறுவர் என்று உறுதியளித்தார்.

இதன் பயனாக, வயது காரணமாக முதலாளிகள் ஒருவருக்கு வேலையை மறுக்கும் நிலை தோன்றாது என்று அவர் விளக்கினார்.

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தேவன் நாயர் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் கழகத்தில் நேற்று பேசிய திரு தர்மன், கொரோனா கொள்ளைநோய் உலகில் சமூகப் பிளவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

சில பிரிவினரிடையே வேலையிழப்பு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய மூத்த அமைச்சர், பள்ளி செல்லும், குறிப்பாக வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் பயணத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக சொன்னார்.

“இவை யாவும், செய்வதறியாது தவிக்கும் நிலையை மோசமாக்கி உள்ளதுடன், உலக அளவில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளோர் இடையே சமுதாயக் கட்டமைப்பு தங்களுக்கு எதிராக நிலைபெற்றுள்ளதாக ஒரு எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளது.

“இது, இன ரீதியாக, தாங்கள் அநீதிக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக கொண்டு உள்ள எண்ணங்களுக்கு வலுவூட்டியுள்ளன,” என்று மூத்த அமைச்சர் தர்மன் தெரிவித்தார்.

இதுபோன்ற எண்ணப்போக்கு சிங்கப்பூரில் நிலைகொண்டு விடாது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

“ஆசியாவிலும், மேலை நாடுகளிலும் ஒற்றுமையாகத் திகழ்ந்த பல சமுதாயங்கள் இன்று சிதறுண்டு கிடக்கின்றன. ஆனால், பல நாடுகளில் தென்படும் சமூக ஒற்றுைமயின்மை, தனியே ஒடுங்கிப் போகும் போக்கு, விரக்தி மனப்பான்மை ஆகியவற்றை முழுமையாகத் எதிர்த்து சிங்கப்பூரர்கள் செயல்பட வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.

வேலையிழந்தோர் மீண்டும் வேலைக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் தலையாய பணி என்று கூறிய திரு தர்மன், இதைச் சந்தை நிலவரத்துக்கு விட்டுவிட முடியாது என்று கூறினார்.

“உலகப் பொருளியலில் நிச்சயமற்ற நிலை தொடரும் வரை, உலக வர்த்தகமும் பயணங்களும் முடங்கியிருக்கும் வரை, சிங்கப்பூரில் வேலையிழப்புகளைவிட புதிய வேலைகள் உருவாவது குறைவாகவே இருக்கும்,” என அவர் எச்சரித்தார்.

வேலையில்லாதவர்களுக்கு படித்தொகையை வழங்குவதைவிட, வேலைவாய்ப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் அரசாங்கத்தின் ஆதரவு கூடுதல் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

எனவேதான், இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தற்காலிக வேலைகள், வேலைப் பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூரர்களை வேலையில் சேர்த்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு துறையைச் சார்ந்த நிறுவனங்களுடன் அரசாங்கம் பணியாற்றி வருவதாக திரு தர்மன் சொன்னார்.

தேசிய ஒளிபரப்புத் தொடரில் கடைசியாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டின் ஆங்கில உரை நாளை மறுதினம் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!