ஜூலை 3 முதல் பார்வையாளர்களை அனுமதிக்கும் இந்திய மரபுடைமை நிலையம்

கொவிட்-19 நெருக்கடிகளால் மூடப்பட்ட இந்திய மரபுடைமை நிலையம் நாளை (ஜூலை 3) முதல் பார்வையாளர்களை அனுமதிக்க உள்ளது.

அங்கு வரும் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் அது தெரிவித்துள்ளது.

கேம்பல் லேனில் இருக்கும் இந்திய மரபுடைமை நிலையத்துக்குச் செல்ல விரும்புவோர், அது திறந்திருக்கும் நேரம் பற்றிய விவரங்களை தொலைபேசி வழியாகவோ அல்லது இணையம் வழியாகவோ தெரிந்துகொண்டு செல்லலாம்.

நிலையத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிந்திருக்குமாறு பார்வையாளர்களை நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல, உடல்நலக் குறைவு இருந்தால் அங்கு வருவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை வைத்துள்ளது நிலையம்.

நிலையத்துக்கு வருவோரின் வருகை பதிவு செய்யப்படுவதுடன், அவர்களது உடல் வெப்பநிலையும் அளவிடப்படும்.

ஒரே வீட்டில் வசிக்காதவர்கள் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், தேவைப்படும்போது, காட்சிக் கூடத்தில் இருக்கும் கிருமிநாசினியைப் பயன்படுத்துமாறு பார்வையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

நிலையத்தில் இருக்கும்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக நிலைய ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

பார்வையாளர்கள் மற்றும் நிலைய ஊழியர்களின் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!