பெருவிரைவு ரயில் திட்டத்திற்கு ஜூலை 31க்குள் இறுதி வடிவம்: மலேசியா நம்பிக்கை

2 mins read
e6dc5ad0-ba60-41c5-bf81-d138fb2f4024
சிங்கப்பூர் - ஜோகூர் பாலம். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜோகூர்; சிங்­க­ப்­பூ­ருக்­கும் ஜோகூ­ருக்­கும் இடை­யி­லான ஆர்­டி­எஸ் எனப்­படும் பெரு­வி­ரைவு ரயில் போக்­கு­வ­ரத்து தொடர்­பான அம்­சங்­கள் இம்­மாத இறு­திக்­குள் பேசித் தீர்க்­கப்­பட்­டு­வி­டும் என்று மலே­சியா நம்­பிக்கை தெரி­வித்து உள்­ளது.

"இந்த ரயில் போக்­கு­வ­ரத்­துத் திட்­டம் தொடர்­பில் 222 பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காணப்­பட வேண்டி இருந்த நிலை­யில் இரு நாடு­களும் 220 பிரச்­சி­னை­க­ளைப் பேசித் தீர்த்­து­விட்­டன.

"எஞ்சி இருப்­பது இரண்டு விவ­கா­ரங்­கள் மட்­டுமே. அவை குறித்து வரும் 13ஆம் தேதி தொழில்­நுட்­பக் குழு கூடி ஆலோ­சிக்­கும்," என்று மலே­சிய மூத்த அமைச்­சர் அஸ்­மின் அலி தெரி­வித்துள்­ளார்.

இருப்­பி­னும் அந்த இரு விவ­கா­ரங்­கள் என்ன என்­பதை அவர் விவ­ரிக்­க­வில்லை. மலே­சி­யா­வின் அனைத்­து­லக வர்த்தக தொழில் அமைச்­ச­ரு­மான திரு அஸ்­மின், நேற்று முன்­தி­னம் ஜோகூ­ரில் உள்ள தொழில் துறை­யி­ன­ரு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார்.

அந்­தக் கூட்­டத்­திற்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "பெரு­வி­ரைவு ரயில் திட்­டம் குறித்து போக்­கு­வ­ரத்து அமைச்சை தொடர்­பு­கொண்டு பேசி­னேன். எஞ்சி இருக்­கும் இரு அம்­சங்­கள் குறித்து இரு நாட்­டுக் குழுக்­களும் விரை­வில் பேசித் தீர்த்­து­வி­டும் என்று அமைச்­சின் சார்­பில் என்­னி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

"திட்­டம் தொடர்­பான முழு அள­வி­லான பேச்­சு­வார்த்­தை­யை­யும் இம்­மா­தத்­திற்­குள் முடிக்க வேண்டி உள்­ள­தால் அந்த இரு பிரச்­சி­னை­க­ளுக்­கும் விரைந்து தீர்வு காண வேண்­டி­யது அவ­சி­யம்," என்­றார்.

ரயில் திட்­டத்­திற்கு இறுதி வடி­வம் கொடுக்க மேலும் மூன்று மாத அவ­கா­சத்தை கடந்த மே மாதம் மலே­சியா கேட்­டி­ருந்­தது. அதற்கு ஒப்­பு­தல் அளித்த சிங்­கப்­பூர் இதுவே இறுதி கெடு என்­றும் தெரி­வித்­தி­ருந்­தது.