இழந்த களையை மெல்லப் பெற்றுவரும் விலங்கியல் தோட்டம்

கொரோனா கிருமிப்பரவலால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த விலங்கியல் தோட்டத்திற்கு இன்று கிட்டத்தட்ட 2,000 பேர் வருகை அளித்தனர். ஜூரோங் பறவைப்பூங்கா, ரிவர் சஃபாரி ஆகிய இடங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்களை வரவேற்கத் தொடங்கின.

நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் தொடங்கியது முதல் வெறிச்சோடிக் காணப்பட்ட இந்த இடங்கள், இளையர் தினமான இன்று பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்களின் வருகையால், கலகலப்புடன் காணப்பபட்டன. ஆயினும், இந்த மூன்று இடங்களில் அனுமதிக்கப்படும் வருகையாளர் எண்ணிக்கையில் கால் பங்கினர்தான் வருகையாளர்கள் (அதாவது 1,000 முதல் 2,250 வருகையாளர்கள் வரை) தற்போது அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் வருகையாளர்கள் இணையத்தில் முன்பதிவு செய்த பிறகுதான் வரவேண்டும்.

எத்தனை வருகையாளர்கள் வந்துள்ளனர் என்பதை மதிப்பிட்டுக் கண்காணித்துவரும் தொழில்நுட்பம் ஒன்றும் பயன்படுத்தப்படுவதாகச் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் பேச்சாளர் இன்று தெரிவித்தார். கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த 'டிராம்' (tram) சவாரிகள், விலங்கு சாகச நிகழ்ச்சிகள், சிறார்களுக்கான நீர்விளையாட்டு இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!