சமூக அளவிலான கிருமிப் பரவல் சம்பவங்களை ஆராய்ந்ததில் கொவிட்-19 உறுதி செய்யப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினர் நோய் அறிகுறிகளின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தபோதும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரிய வந்ததாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செயல்கள் கொவிட்-19க்கு எதிரான முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கும் என்று எச்சரித்த அவர், உடல்நிலை சரியில்லாவிட்டால் மருத்துவரைக் காணுமாறும் மருத்துவ விடுப்பில் இருந்தால் வீட்டிலேயே இருக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
கிருமித்தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கான முயற்சிகளை அமைச்சு வேகப்படுத்தி இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக கண்காணிப்பு தீவிரமாகி இருப்பதாகவும் அமைச்சர் கான் குறிப்பிட்டார்.

