அப்பர் பாய லேபார்: தனியார் குடியிருப்புப் பகுதியில் பச்சிளம் குழந்தையைக் கைவிட்டதாக இந்தோனீசிய பெண் கைது

அப்பர் பாய லேபார் ரோட்டுக்கு அருகில் உள்ள தாய் செங் கார்டன்ஸ் தனியார் குடியிருப்புப் பகுதியில் தன்னுடைய பச்சிளம் குழந்தையைக் கைவிட்டுச் சென்றதாக நம்பப்படும் 29 வயது இந்தோனீசிய மாது கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்த குப்பைத் தொட்டி ஒன்றில் நேற்று முன்தினம் (ஜூலை 27) கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த ஆண் சிசு, கேகே மகளிர் மற்றும் சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

குழந்தையின் உடலில் காயங்கள் எதுவும் தென்படவில்லை; அது நல்ல நிலையில் இருப்பதாக போலிஸ் தெரிவித்தது.

அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டும், காணொளிப் பதிவுகளை ஆராய்ந்தும் அந்தப் பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்தனர்.

12 வயதுக்குட்பட்ட குழந்தையைக் கைவிட்டதற்காக குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 317ன் கீழ் அந்தப் பெண்ணின் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!